Skip to main content

பாலசுப்ரமணியம் கவிதை


இந்த இரவில் விழித்திருந்து
இரவின் கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

முத்தமிட்ட இதழ்கள்
ஒற்றை மர உதிரும் மஞ்சள் நிற இலைகள்
மயக்கமூட்டும் மதுக்குடுவையின் மூடிகள்
காணவே காண முடியாத
தூரக் கிணறுகளின் ஆழ மீன்கள்
மற்றும்
என் நண்பர்கள் தங்கள் மனைவிகளோடு
உறங்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறேன்

இந்த மழைக்காலத்தில்
வெய்யில் எவ்வளவு விருப்பமானதோ
அப்படித்தான்
எனக்கும் இரவின் கண்களைப் பார்ப்பதும்
ஆனாலும் பெரியதொரு குற்றச்சாட்டோடு

அப்போதுதான்
நான் கண்ணீர் நிரம்பிய மெத்தைகளில்
புரண்டு படுக்கிறேன்.

Comments

மழை said…
இந்த மழைக்காலத்தில்
வெய்யில் எவ்வளவு விருப்பமானதோ
அப்படித்தான்
எனக்கும் இரவின் கண்களைப் பார்ப்பதும்
ஆனாலும் பெரியதொரு குற்றச்சாட்டோடு///

நன்று:)

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

அதிர்ச்சி ரிப்போர்ட்

க டைசியில் அவன் அறிந்து கொண்டான் அவள் இல்லாத போதுதான் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்கிற உண்மையை அதனினும் கடைசியாக அவன்  திடுக்கிட்டு அறிந்ததுவோ... மகிழ்ச்சியாக இருப்பதில்தான் என்னவோ  சிக்கல் அவனுக்கு

வெண்டை விரல்களுக்கெதிரான விடுதலைப்பாட்டு

  பி யானோ வகுப்பில் இன்று புதிய பாடம் என் மாஸ்டர் அதிகம் பேசமாட்டார் அவ்வப்போது முறைப்பார் இன்றோ மூன்றுமுறை முறைத்துவிட்டார் கடைசியில் என் கை பாடிவிட்டது  சமதளத்திலிருந்து சற்றே நீண்டு ‘ஷர்ப்’ பைத் தீண்டுகையில் என் விரல்களை நான் கண்டேன். ஆஹா…! என்னுடையதோ இவை… இத்தனை  ஜ்வலிப்போ இதற்கு… நீந்து மீனோ.. தாவு அணிலோ.. தெய்வம் என்று பெயர் பெற்ற மூடமே! என்னுடை விரல்களை என்னுடை  கண்களில் காட்ட 47 ஆண்டுகள்  வேண்டுமோ உமக்கு?