நான் எளியனில் எளியன்.
லூஸ்ஹேருக்கு மயங்குபவன்.மனம் போன போக்கில் தான் போகிறேன்
மனம் போகிறது
அதனால் போகிறேன்.
லூஸ்ஹேரில் பரலூஸ்ஹேர் என்றொன்றில்லை.
என் உடலொரு கருவண்டுக் கூட்டம்.
ஒவ்வொரு லூஸ்ஹேரின் பின்னும்
ஒரு வண்டு பறக்கிறது.
எப்போதும் என் முன்னே ஒரு சுழித்தோடும் காட்டாறு.
காட்டாற்றைக் கடக்க உதவும் ஆல்விழுதே…
உன்னை சிக்கெனப் பற்றினேன்.
எனக்குத் தெரியும்.
லூஸ்ஹேரை மயிரென்றெழுதி கெக்கலித்த ஓர் அறிவிலி
கடைசியில் அதிலேயே தூக்கிட்டு மாண்டகதை.
ஈரும் பேனும் நாறும் இடமென தவநெறி முனிந்தால்,
லூஸ்ஹேரின் நுனியில்
தொங்கிச் சொட்டும் துளிநீரில்
இவ்வுலகு உய்கிறது என்பேன்.
( யாத்ராவிற்கு )
Comments
லூஸ் ஹேர் காரணமாக பலர் லூசாக அலைவது புரிகிறது.........