2008 -ல் இளங்கோவின் காயசண்டிகை நூலிற்கு எழுதிய மதிப்பரையில் துவங்கி 2013 -ல் லிபிஆரண்யாவின் "
உபரிவடைகளின் நகரம்"
நூலிற்கு எழுதியிருக்கும்
விமர்சனக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக கொண்டுவரவுள்ளேன். பின்னிணைப்பாக
"கொம்பு' இதழில்
வரவுள்ள பேட்டியும் உண்டு. நூலை சந்தியா பதிப்பகம் வெளியிடவுள்ளது.
பாரதி, ஒளைவை, அம்பிகாபதி, ஒப்பிலாமணிப்புலவர், இராமச்சந்திரகவிராயர், மதுரகவிராயர், சத்திமுத்தப்புலவர், காளமேகப்புலவர்,எம்.கே.டி, பெருமாள்முருகன், ஸ்ரீநேசன், ராணிதிலக், எஸ்.செந்தில்குமார்,
இளங்கோகிருஷ்ணன்,
தூரன்குணா போன்ற
அறிவினர்
குழுமியிருப்பதால் " அதனினும் இனிது அறிவினர் சேர்தல்" என்கிற
தலைப்பு பொருத்தமுடைத்தாகிறது. தொகுப்பிற்கான தலைப்பை
தந்தமைக்காக ஒளைவையின் பாதங்களில் விழுந்து தொழுகிறேன்.
Comments