Skip to main content

பதினெட்டாவது குண்டுவெடிப்பு சம்பவம்


     

     


மன்னித்துக்கொள்ளுங்கள் “ 
  என்பது போல
  என் உடைந்த ரிமோட்டை
  அந்தக் கடையின் டேபிளில் வைத்தேன்.
  கடைக்காரர் அதை எடுத்துப் பார்த்தார்.
  ஒரு குண்டு வெடித்தது போல
  அது சிதறியிருந்தது.

 இதழ்க்கடையில் புன்னகைத்த அவர்,
 மன்னித்தோம்  என்பது போல
   புது ரிமோட்டை எடுத்து டேபிளில் வைத்தார்.
   ''எப்படியென்றே தெரியவில்லை... 
    பீரோ மேலிருந்து
    தானாகவே கீழே விழுந்து உடைந்து விட்டது “
    என்று சொன்னேன்.
   அப்போதும் அவர் இதழ்க்கடையில் புன்னகைத்தார்.
   ரிமோட்டுகள் தன்னுயிரை ஈந்து
   எத்தனையோ உயிர்களை காத்து வருகின்றன.
   அவை நம் வாழ்வின் இருண்ட கதைகளை
   தன் சிதைந்த உருவின் வழியே 
   ரகசியமாக  சொல்லி வைக்கின்றன.
   மனித வாழ்வு எவ்வளவு விசித்திரமானதும், சிக்கலானதும்
  என்பதை அறிந்து கொள்ள
  மலைவெளிக்குள் நுழைந்து 
  குகை வழிக்குள் புகுந்து
  ஒரு சிரைக்காத யோகியை போய் பார்க்கப் போகிறீர்களா ?
  நமது ரிமோட் கடைக்காரரைக் கேளுங்கள்...
  அவர் சொல்வார் ஆயிரம்.



Comments

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?