Skip to main content

தங்கவேல், முத்துவேல், ஞானவேல், வடிவேல் …



தங்கவேலுவின் காதல் முத்துவேலை அழைத்து
கோபமாக கத்தியது.
இந்த உலகத்தில் நீதி செத்துவிட்டதுஎன்று சொன்னது.
முத்துலேல் தன் வாழ்வில் அநேகந் தடவைகள்
அந்த வசனத்தை கேட்டிருந்தார்.
ஆமாம்….ஆனால் இது ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதுஎன்றார்.
அவளொரு நயவஞ்சகி என்றது.
நயவஞ்சகம் என்கிற சொல்லில் கூட
கொஞ்சம்  புளித்த வாடையடித்ததால்
அவர் பேச்சை திசைதிருப்ப முயன்றார்.
“  தமிழ்மூவர்கேட்டீர்களா ? “
என்று கேட்டு வைத்தார்.
தொலைபேசியின் மறுமுனையில் இருப்பது காதல்
அதுவும் ஆக்ரோச கதியில்.
பாவம், அதையவர் அறிந்திருக்கவில்லை.
தமிழ் ஒரு புடலங்காய்
 அந்த மூவரும் சுரைக்காய்கள்
என்று பதில்வரவே, முத்துவேல் அமைதியானார்.
பின் தன் பழைய நினைவுகளின் பாழண்டிய பக்கங்களை
புரட்டத் துவங்கியது அது.
அதில் நிலவுப்பயன் துய்த்த காட்சிகளும்,
கைநரம்பு அறுந்து இரத்தம் பீறிட்ட காட்சிகளும் வந்தன.
பழைய நினைவுகளின் புத்தகத்தை கையில் எடுத்ததுமே
அதன் கோபமும் ரோஷமும் பறந்து விட்டது.
…..ள்…..ளீ .. “ என்று கொஞ்சியது.
அப்போது தோ ஒரு சொரசொரத்த கரம்
 தன் கன்னத்தை செல்லமாக கிள்ள,
 முத்துவேல் அதை எரிச்சலில் தட்டிவிட்டார்.
 அவர் நெளிகிறார்..
 வளைகிறார்
பெருமூச்செறிகிறார்
கொட்டாவி விடுகிறார்
அவர் அடிவயிற்றிலிருந்து கூட
எதோ ஒன்று குமட்டி வருகிறது.
எனினும்,
காலத்தை சற்று பின்னோக்கி ஓட்டிப் பார்த்தால்
அங்கு நாம் இதே காட்சியை திரும்பக்காண்கிறோம்.
ஆனால், அதில் தங்கவேலின் பாத்திரத்தில் நடித்திருப்பவர்
நமது  முத்துவேல்.
கிள்ளப்பட்ட கன்னம் ஞானவேலுடையது.
ஞானவேலின் கதை எனக்குத்  தெரியாது.
ஆனால் எனக்கு வடிவேலைத் தெரியும்.
அவர்தான் தங்கவேலின் கன்னத்தை கிள்ள இருப்பவர்

Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.