Skip to main content

தங்கவேல், முத்துவேல், ஞானவேல், வடிவேல் …



தங்கவேலுவின் காதல் முத்துவேலை அழைத்து
கோபமாக கத்தியது.
இந்த உலகத்தில் நீதி செத்துவிட்டதுஎன்று சொன்னது.
முத்துலேல் தன் வாழ்வில் அநேகந் தடவைகள்
அந்த வசனத்தை கேட்டிருந்தார்.
ஆமாம்….ஆனால் இது ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதுஎன்றார்.
அவளொரு நயவஞ்சகி என்றது.
நயவஞ்சகம் என்கிற சொல்லில் கூட
கொஞ்சம்  புளித்த வாடையடித்ததால்
அவர் பேச்சை திசைதிருப்ப முயன்றார்.
“  தமிழ்மூவர்கேட்டீர்களா ? “
என்று கேட்டு வைத்தார்.
தொலைபேசியின் மறுமுனையில் இருப்பது காதல்
அதுவும் ஆக்ரோச கதியில்.
பாவம், அதையவர் அறிந்திருக்கவில்லை.
தமிழ் ஒரு புடலங்காய்
 அந்த மூவரும் சுரைக்காய்கள்
என்று பதில்வரவே, முத்துவேல் அமைதியானார்.
பின் தன் பழைய நினைவுகளின் பாழண்டிய பக்கங்களை
புரட்டத் துவங்கியது அது.
அதில் நிலவுப்பயன் துய்த்த காட்சிகளும்,
கைநரம்பு அறுந்து இரத்தம் பீறிட்ட காட்சிகளும் வந்தன.
பழைய நினைவுகளின் புத்தகத்தை கையில் எடுத்ததுமே
அதன் கோபமும் ரோஷமும் பறந்து விட்டது.
…..ள்…..ளீ .. “ என்று கொஞ்சியது.
அப்போது தோ ஒரு சொரசொரத்த கரம்
 தன் கன்னத்தை செல்லமாக கிள்ள,
 முத்துவேல் அதை எரிச்சலில் தட்டிவிட்டார்.
 அவர் நெளிகிறார்..
 வளைகிறார்
பெருமூச்செறிகிறார்
கொட்டாவி விடுகிறார்
அவர் அடிவயிற்றிலிருந்து கூட
எதோ ஒன்று குமட்டி வருகிறது.
எனினும்,
காலத்தை சற்று பின்னோக்கி ஓட்டிப் பார்த்தால்
அங்கு நாம் இதே காட்சியை திரும்பக்காண்கிறோம்.
ஆனால், அதில் தங்கவேலின் பாத்திரத்தில் நடித்திருப்பவர்
நமது  முத்துவேல்.
கிள்ளப்பட்ட கன்னம் ஞானவேலுடையது.
ஞானவேலின் கதை எனக்குத்  தெரியாது.
ஆனால் எனக்கு வடிவேலைத் தெரியும்.
அவர்தான் தங்கவேலின் கன்னத்தை கிள்ள இருப்பவர்

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான