காந்திபுரம்,
கிராஸ்கட் ரோட்டில்
மொத்தம்
9 குறுக்குச்சந்துகள் உள்ளன
அதில்
மூன்றாவது சந்தில்
கனவுகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு மகள்
பள்ளிச்சீருடையில்
நாணிக்கோணிக்
காதலித்துக் கொண்டிருக்கிறாள்
அதன்
ஐந்தாவது சந்தில்
19
வயதில் இல்லறத்துள் உதைத்துத் தள்ளப்பட்ட
அவள்
அன்னை
விட்டதைப்
பிடிக்கும் முனைப்புடன் தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறாள்.
முதல்
சந்தில் அமர்ந்திருக்கிறார்
ஒரு
அரசமரத்தடி பிள்ளையார்.
அவர்தான்
அந்த ஒன்பது சந்துக்களையும்
இழுத்துப்
பிடித்துக் காவல் செய்கிறார்.
வாயிலிருந்து
விசிலை இறக்காமல்
ஓடியாடி
பணியாற்றுகிறார்.
ஒரு
கண்டிப்பான போக்குவரத்துக் காவலரைப் போல
அந்தந்த
சந்திற்கான வாகனங்களை
மிகச்
சரியாக
அதனதன்
வழியில் விடுகிறார்.
“privacy
“ என்கிற சொல்லால்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிற
இருவரும்
ஒருவர்
போனை ஒருவர் நோண்டுவதில்லை.
ஒருவர்
அறையை இன்னொருவர்
துப்பறிவதில்லை.
நள்ளிரவில்
சின்ன சத்தமும் துல்லியமாகிவிடும் என்பதால்
இரண்டு
போன்களிலும்
“ DIAL PAD TUNE “ கள் “ mute “ – இல் இருக்கின்றன.
அன்னையர்
தினத்திற்கு
மகள்
ஒரு கட்டிமுத்தத்தை பரிசளிக்கிறாள்.
காதலர்தினத்திற்கு
அன்னை
ஒரு பற்தடத்தை
பரிசளிக்கிறாள்.
மூன்றாவது
சந்தும் ஐந்தாவது சந்தும்
அதனதன்
கதியில் இயங்கிக் கொண்டிருப்பதால்
கட்டிமுத்ததிற்கோ, பற்தடத்திற்கோ
ஒரு
குறையும் நேர்வதில்லை.
உமைக்கினிய
மைந்தன், கணநாதன்
நம்
குடியை வாழ்விப்பான்.
அவனுக்குச்
சொல்வோம் ஆயிரம் ஸ்தோத்ரம்.நன்றி : உயிர்மை : ஜூலை -2017
Comments