நள்ளிரவு 2:00 மணிவாக்கில்
உன் புகைப்படத்தை
என் Dp- யாக வைத்தேன்
பெருந்திணை
அன்பின் புறநடையென்பதால்
உடனே
அஞ்சி அகற்றி விட்டேன்.
ஒரு முக்கால் நிமிஷம்
நீ என் உரிமையில் இருந்தாய்.
அதற்குள் யாரேனும் பார்த்திருப்பார்களா?
நடுசாமத்தில் யார் பார்க்கப்
போகிறார்கள்?
ஆனாலும்
யாரேனும் பார்க்கத்தானே வைத்தேன்.
ஒருவர் கூடவா
பார்த்திருக்க மாட்டார்கள்?
நல்லவேளை
நீ குளோசப்பில் சிரிக்கவில்லை
எனவே,எந்தக் கண்ணிலும் விழுந்திருக்காது
ஒரு கண்ணிலுமா விழுந்திருக்காது?
நன்றி: உயிர்மை- ஜூலை-2017
உன் புகைப்படத்தை
என் Dp- யாக வைத்தேன்
பெருந்திணை
அன்பின் புறநடையென்பதால்
உடனே
அஞ்சி அகற்றி விட்டேன்.
ஒரு முக்கால் நிமிஷம்
நீ என் உரிமையில் இருந்தாய்.
அதற்குள் யாரேனும் பார்த்திருப்பார்களா?
நடுசாமத்தில் யார் பார்க்கப்
போகிறார்கள்?
ஆனாலும்
யாரேனும் பார்க்கத்தானே வைத்தேன்.
ஒருவர் கூடவா
பார்த்திருக்க மாட்டார்கள்?
நல்லவேளை
நீ குளோசப்பில் சிரிக்கவில்லை
எனவே,எந்தக் கண்ணிலும் விழுந்திருக்காது
ஒரு கண்ணிலுமா விழுந்திருக்காது?
நன்றி: உயிர்மை- ஜூலை-2017
Comments