Skip to main content

நந்தவனம்


நோயுற்றவனை
நந்தவனத்தை நோக்கும்படி
படுக்கவைக்காதிருப்பது நல்லது
புலரியின் இளங்கதிர்கள்
அவன் கண்களில் எரியும்.
வீசு தென்றலுக்கும், வீங்கிள வேனிலுக்கும்
அவன் தலை வெடித்துவிடும்.
சடசடக்கும் மழை நடனம்
அவன் ஊனத்தைப் பெருச் செய்யும்.
கீச்சொலியின் கூரலகு
அவன் நெஞ்சத்தில் துளையிடும்.
விளக்கை அணைத்து விட வேண்டும்
கதவை நன்றாகத் தாளிட வேண்டும்.
கம்பிகளுக்கிடையே நாக்கை நீட்டி
இந்த வாழ்வை நக்கிவிடாத படிக்கு
சாளரத்தை அடித்துச் சாத்தி விட வேண்டும்.

நோயுற்றவனை
நந்தவனத்தை நோக்கும்படி
படுக்கவைப்பது நல்லது.
புலரியின் இளங்கதிர்கள்
அவனை
மடியில் ஏந்தித் தலைநீவும்.
தென்றலும், வேனிலும்
அறையை வெளியாக்கும்.
கொட்டுமழை
அவனது
நனையாத இடத்தையெல்லாம் நனைத்துவிடும்.
கீச்சொலிகள்
இந்த வாழ்வு ஒரு பாடல் என்று
அவனுக்கு உறுதி சொல்லும்.
மைனாவைக் கண்டு கண்டு
மைனாபோலாகி
மைனாவாகி விடலாம்.
நோயின் வாயிலிருந்து
ஒரு மைனா பறந்து செல்வதை
நாம் கண் ஆரக் காணலாம்.

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நக...

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் ...