இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள்.
அவன் அதை வாங்கினான்.
அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள்
அவன் வாங்கிக் கொண்டே இருந்தான்.
அவள் விடவில்லை.
அவன் விடுவிக்கவுமில்லை.
அங்கு ஒன்றுமே நடக்கவில்லை.
அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது.
அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது.
அங்கு காலம் பரபரப்பில் இருந்தது.
இப்போதும்
அந்த ஒன்றுமற்ற ஒன்றை
துலக்கித் துலக்கி
விளக்கேற்றி மகிழ்கிறது
நரைமுற்றிய அந்தத் தம்பதி.
Comments