Skip to main content

நான்கு கவிதைகள்

மர்ம மலர்
தலைவன் ஊடலின் குகைக்குள் இருக்கிறான்.
விடாது தொடுத்த 11 வது அழைப்பால்
தலைவி அதை முட்டித் திறக்கிறாள்.
அவன் ” ம்” கொட்டுகிறான்.
உள்ள பாறைகளில் உருண்டு திரண்டது “ம்” எனும் பாறை
தலைவி தன் தலை கொண்டு மோதி
அதையும் உடைக்கிறாள்.
கண்ணீரில் உடைந்த குரலிற்கென்று ஒரு தனி மதுரமுண்டு.
தலைவன் அதை முன்பறியா பாலகன்.
அம்மதுரம்
ஊடலின் கழுத்தைத் திருகி
குப்பை மேட்டில் எறிகிறது.
விட்ட கதைகளை பேசித் தீர்த்தபின்
அவன் தன் உள்ளாடையில்
ஒரு சின்ன ஈரத்தை உணர்ந்தான்.
அது கண்டு திகைத்தான்.
குழம்பினான்.
வருந்தினான்.
பிறகு
வெற்றுத் தரையில்
நிலவின் கீழ் மல்லாந்த படி
தன் முதல் பாடலைக் கட்டினான்.
“உலகின் அழகான விந்துக்கறையே!”

ஒழிக நின் கொற்றம் !

என் பொறாமை
எனக்கு வணக்கம் தெரிவித்தது.
நான் தூரத்து மேகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தோள்தொட்டுத் திருப்பி
திரும்பவும் சொன்னது.
முகந்திரிந்து யார் என்பது போல் நோக்கினேன்.
பேர் சொன்னது
ஊர் சொன்னது
ஒன்றாகப் படித்த பள்ளியைச் சொன்னது.
இருவருக்கும் பொதுவான நண்பர்களைச் சொன்னது.
எந்தெந்த மரத்திலேறி
எந்தெந்த ஆற்றில் குதித்தோம்
என்று சொன்னது.
அடிவயிற்றில் உதைபட்டு
கும்மிருட்டில் கிடந்து விசும்பிய நாளை
நினைவு படுத்தியது.
பழங்கதைகள் இப்படி பலபல பேசியது.
கடைசியில்
ஒரு ஒடுங்கிய அலுமினியப் பாத்திரத்தை
தலையிலேற்றி
குரங்கைப் போல் குட்டிக்கரணம் அடித்துக் காட்டியது.
“தெரியவே தெரியாது” என்று
உறுதியாக மறுத்துவிட்டேன்.

பேசிக் மாடலுக்குத் திரும்புதல்
தன் ஆண்ட்ராய்டை தரையில் அடித்து
உடைத்து விட்டு
பேசிக் மாடலுக்குத் திரும்புகிறான் ஒருவன்.
பேசிக் மாடலுக்குத் திரும்புவதென்பது
மாட்டு வண்டிக்குத் திரும்புவது
நிலா சோற்றுக்குத் திரும்புவது
அணிலாடும் முன்றிலுக்குத் திரும்புவது
P.b. ஸ்ரீனிவாஸிற்குத் திரும்புவது
மீதியை வெண்திரையில் காண்க என்கிற
பாட்டுப் புத்தகத்திற்குத் திரும்புவது
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு
சூர்யா டி.விக்குத் திரும்புவது
“I love you” என்கிற ஆகப் பெரும் குழப்பத்திலிருந்து
“நான் உன்னைப் புணர விரும்புகிறேன்” என்கிற
தெள்ளத் தெளிவிற்குத் திரும்புவது.



அவ்வளவு
நீ ஏன்
அவ்வளவு தூரத்திலிருக்கிறாய்?
சென்று
காணுமளவுக்கு.

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம