1. தாவாங்கட்டையில் அணிந்திருக்கும் நைந்த மாஸ்க்கோடு அந்த சின்ன கிராமத்திற்குள் நுழைகிறான் கிளி ஜோசியக்காரன் முதல் தெருவில் ஒரு பிணம் விழுந்துள்ளது "தளபதி சக்திவேல்" காலமாகிவிட்டார். கெத்தாக வாழ்வதற்கு கெத்தான பெயர் அவசியம்தான். நேற்று தளபதியும் சக்திவேலும் மடிந்துவிட்டனர். கிளி ஜோசியக்காரன் யாரையும் அதிர்ஷ்டம் பார்க்க அழைக்க வில்லை. கிளி அழைக்கிறது. அவன் அதை அதட்டி அடக்குகிறான். இரண்டாவது, மூன்றாவது என அடுத்தடுத்த தெருக்களிலும் அவன் யாரையம் அழைக்கவில்லை. கிளி அழைத்தது அவன் அதட்டினான். 9 வது தெருவில் அவன் அழைக்கவில்லை அதுவும் அழைக்கவில்லை. கிளிக்கு என்னவோ புரிந்துவிட்டது. ஆனால் எதுவும் புரியவில்லை. 2.
வெயில் அள்ளிக் கொட்டியது. ஒரு மாடிவீட்டு நிழலில் நின்று பீடியைப் பற்றவைத்தான் கிளி ஜோசியக்காரன். கிளி ஜோசியம் ஒரு விளையாட்டாகி காலங்கள் ஆகிவிட்டன அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவனுக்கு இதுபோல் விளையாட்டாகத்தான் ஏதாவது செய்ய வரும்.
|
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments