1. தாவாங்கட்டையில் அணிந்திருக்கும் நைந்த மாஸ்க்கோடு அந்த சின்ன கிராமத்திற்குள் நுழைகிறான் கிளி ஜோசியக்காரன் முதல் தெருவில் ஒரு பிணம் விழுந்துள்ளது "தளபதி சக்திவேல்" காலமாகிவிட்டார். கெத்தாக வாழ்வதற்கு கெத்தான பெயர் அவசியம்தான். நேற்று தளபதியும் சக்திவேலும் மடிந்துவிட்டனர். கிளி ஜோசியக்காரன் யாரையும் அதிர்ஷ்டம் பார்க்க அழைக்க வில்லை. கிளி அழைக்கிறது. அவன் அதை அதட்டி அடக்குகிறான். இரண்டாவது, மூன்றாவது என அடுத்தடுத்த தெருக்களிலும் அவன் யாரையம் அழைக்கவில்லை. கிளி அழைத்தது அவன் அதட்டினான். 9 வது தெருவில் அவன் அழைக்கவில்லை அதுவும் அழைக்கவில்லை. கிளிக்கு என்னவோ புரிந்துவிட்டது. ஆனால் எதுவும் புரியவில்லை. 2.
வெயில் அள்ளிக் கொட்டியது. ஒரு மாடிவீட்டு நிழலில் நின்று பீடியைப் பற்றவைத்தான் கிளி ஜோசியக்காரன். கிளி ஜோசியம் ஒரு விளையாட்டாகி காலங்கள் ஆகிவிட்டன அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவனுக்கு இதுபோல் விளையாட்டாகத்தான் ஏதாவது செய்ய வரும்.
|
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments