கடவுள் என்னை மறந்துவிட்ட போது நான் எவ்வளவோ துண்டுச்சீட்டுக்களை எழுதி எழுதி நீட்டினேன். ஒவ்வொன்றையும் சொத சொதவென குருதியால் நனைத்திருந்தேன் அவர் எவ்வளவோ சதைக்கூளங்களைக் கண்டவர். எல்லாச் சீட்டுகளையும் மொத்தமாக மறந்துவிட்டார். கடவுள் மறப்பது போல் நடிப்பவர் என்பதால் அவருக்கு நினைவுறுத்த இயலாது கடைசியில் அந்தக் கடவுளையே மொத்தமாக மறந்துவிடத் துணிந்தேன். கண்ணீரைக் கேட்க ஒருவருமில்லையெனில் கண்ணீர் விட அவசியமில்லை. |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments