இரைச்சலும் குழப்பமும் நீங்காத சந்தைக்கடைத் தெருவில் அமர்ந்துள்ளது ஒரு நாய் அவ்வளவு அழகாக அவ்வளவு கம்பீரத்தோடு "எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்கிற காவலோடு. நான் அதையே நெடுநேரம் உற்றுப் பார்த்தபடி இருந்தேன் அதே நாயின் சாயலில் இன்னொரு நாய் தெரிந்தது. அது பூமிப்பந்தின் முகப்பில் அமர்ந்துள்ளது. அதே பாவனையோடு அதே உறுதிமொழியோடு உள்ளே நாம் மனம் ஓய்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறோம். |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."
Comments