மெயின் பாடகி ஏற்கனவே களைத்திருந்தாள். மேலும் அவளுக்கு தான் யார் என்பது நன்றாகவே தெரியும். பாடலினின் உச்சகட்டத் திருவிழா கோரஸின் பொறுப்பில் இருந்தது. மொத்த அரங்கமும் எழுந்து பறக்கும் தறுவாயில் களைப்பை எறிந்து மெயினை மறந்து அவ்வளவு அனிச்சையாக வந்து கூடினாள் அவள். மெயின் கோரஸில் கலக்கும் கழிமுகத்துச் செழிப்பில் தழைத்து வளர்ந்தது இந்தக் கவிதை. காற்றில் அசைகின்றன பார் இதன் சொற்கள். |
Comments