Skip to main content

வதனப் புத்தகம்

 



ன் வாழ்கிறோம்

என்றே தெரியாமல்

வாழ்ந்து வரும்

கோடிக்கணக்கான மனிதர்களைப் போலே

இந்த  ப்ளூ லைக் 

இங்கே வாழ்ந்து வருகிறது.


கனவான்கள் கொஞ்ச நாட்கள் 

கைக்கொண்டுவிட்டு

கனவானாகவே நீடிக்க முடியாத ஆத்திரத்தில்

அவர்களும் அதை கைவிட்டு விட்டார்கள்.


அதை யாரும் காண விரும்புவதில்லை


அதனோடு இரண்டு வார்த்தை பேச நாதியில்லை.


கல்யாணங் காச்சிக்கு அழைப்பதில்லை.


நீலத்தில் ராசிக்கல் வைத்து 

மோதிரம் அணியும் மாந்தர்க்குக்  கூட

அது நல்ல சகுனமில்லை.


உலகின் முன்னணி மூளைகள்

இணைந்து உருவாக்கிய ஒன்றை

"உயிரற்ற சடம்"  என்று

நேற்றொருவள்  ஏசக் கேட்டேன்.


எல்லோரும்

சிவந்த இதயத்தால் அன்பு செய்து கொள்கிறார்கள்.


சிவந்த இதயத்தால் 

"காலை வணக்கம் "சொல்லி

அதனாலேயே  "இரவு வணக்க"மும்

சொல்கிறார்கள்


இரத்த வேட்கை அலையடிக்கும் சிவப்பால்

இறுக அணைத்து  முத்தமிட்டுக் கொள்கிறார்கள்


இரண்டு சிவந்த இதயங்களுக்குப் பிறந்த பிள்ளைகளில் சில

ருதுவாகி அமர்ந்திருக்கின்றன 

இப்போது.


'ஆலோலம் பாடி' யில் வரும்

அநாதைச் சிறுவனின் முகத்தோடு

இந்த ப்ளூ லைக்

இங்கு 

என்னதான் செய்து கொண்டிருக்கிறது?


ஆதரவாய்க் கைபற்றி  அதை

இந்த ஊருக்கு வெளியே விடப் போகையில்

துளிர்த்த கண்ணீரில் நமட்டுச் சிரிப்பு கலந்து

அது என்னிடம் சொன்னதை

நான் உங்களிடம் 

சொல்லிவிடவே கூடாது என்று எண்ணியிருந்தேன்


ஆயினும்

உண்மை என்றேனும் ஒரு நாள்

வெளிச்சத்திற்கு வரத்தானே வேண்டும்?


"அந்த சிவந்த இதயமும் நான்தான் என்பதை அறிய நேரும் போது 

நீங்கள் என்ன ஆவீர்கள்?"




Comments

This comment has been removed by the author.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம