நாம் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்கையில் உண்மையில் இந்த உலகத்தில் எது உடைந்து போகிறது? எங்கு விரிசல் விழுகிறது? நாம் ஒருவரை ஒருவர் கொஞ்சம் அணைத்துக் கொள்ள ஆதார் எண்களைத் தந்தாக வேண்டும் என்பது ஓர் அநீதி நான் சிறுவனாய் இருக்கையில் காட்டிற்குள் ஒதுங்கிய இரண்டு உடல்களை பின்னால் சென்று துரத்தியுள்ளேன். அது திரும்ப வந்து முறைக்கிறது நம்மை விடைபெறும் தருணத்தில் அணைத்துக் கொள்வதென்பது பண்பாட்டிற்குள் வந்துவிடுகிறது ஒழுக்கத்திற்குள் வந்துவிடுகிறது பேரன்பில் சேரந்து கொள்கிறது. இந்த உலகத்தின் கண்களில் பிரிவையும், கண்ணீரையும் தூவி விட்டுவிட்டு என் வெல்லக்கட்டி... வா! நாம் அணைத்துக் கொள்வோம் நமது ஏங்கிய உடல்களை. |
Comments