கடற்கரையில் களித்திருந்த ஒரு குடும்பம் போட்டோ எடுத்துத் தரக் கோரியது. கடலையும் வானையும் அவர்களோடு கோர்த்து ஒரு சட்டகம் செய்தேன். க்ளிக் செய்யப் போன கடைசித் தருணத்தில் " ஒன் மினிட் ப்ளீஸ்" என்றொரு குரலுயர்ந்து தடுத்தது. அது ஒரு குட்டிப் பாப்பா. இந்தப் படம் எடுப்பவன் கடைசித் தருணத்தில் சொல்லத் தவறிய அத்தனை ஒன் மினிட்களிலும் மோதி ஒலித்தது அந்த ஒன் மினிட். |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments