Skip to main content

பஸ் டிரைவரின் " play list"





தோ இந்த டிரைவர்

ஒலிக்கவிடும் பாடல்கள்

ஏற்கனவே எண்ணிறந்த முறைகள் கேட்டவை.

ஆயினும்

அவை திடீரென வருகின்றன

திடீரென வருதலின் ஆனந்தத்தோடு


என்னிடம் மேம்படுத்தப்பட்ட 

ஒலிநுட்பக் கருவிகள் உண்டு

'அன் லிமிடெட் டேட்டா' வுள் 

உலகம் கொட்டிக் கிடக்கிறது.


தவிர

என்னிடம் ஒரு சிறிய கார் உண்டு

என்னால் காற்றைப் பறிக்க இயலும்

குளுமையைக் கூட்ட இயலும்


இன்னும்

என் கைவசம் நிறையவே உண்டு


கைவசம் உள்ள எல்லாவற்றின் மீதும்

தொற்றிப் படர்ந்துவிடும் ஒன்றை

ஊதி ஊதி துடைத்துக் கொண்டிருக்கிறேன்.


காகங்கள் மகிழ்ந்து கரையும் விருந்தோ

இந்த ஓட்டுநன்!


கை நிறையப் பலகாரங்களோடு

முகம் முழுக்க ஜொலிப்போடு

பள்ளத்துள் கிடக்கும் என் பெயரை 

பறக்க விட்டபடி

என் வீட்டிற்குள் நுழைய

தெரியவில்லை எனக்கு.




Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

நடக்கக் கூடாதவை நடப்பதில்லை

பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின்  சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு  வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும்  உண்டு    சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

கண் கண்ட தெய்வம்

  “பங்கமர் குயில்”  என்று   சக்தியைப் புகழ்கிறான் ஒரு புலவன் வாசிக்க வாசிக்கவே வாசலில் கேட்டது  ஒரு கூவல் உச்சிக் கிளையில் அமர்ந்துளதா? இலைப்புதரில் மறைந்துளதா? மண்ணில் அமுது செய் மாயம் அது எங்குளது? இனிது தவிர  இன்னொன்றறியாய் ! எங்குளாய் நீ? பங்கமர் குயிலே …! பங்கமர் குயிலே …! இம்மரத்திலிருந்து அம்மரத்திற்கு  மாறி அமர்கையில் கண்டேன் உமையை கண் கண்ட தெய்வத்தை.