Skip to main content

Posts

Showing posts from June, 2024

உயிர்மை இதழில் ஒரு நேர்காணல்

அந்தியின்  முன்  நிற்பதும்,  காதலின் முன் நிற்பதும் ஒன்றுதான் சந்திப்பு : சோ. விஜய குமார் உங்கள் படைப்பு மனதை உருவாக்கிய முதல் திறப்புகள் எவை? வாழ்வின் எந்தப் பாதைகளின் வழியே சொற்களை நாடி வந்தீர்கள்? “அங்கு கத்தும் குயிலோசை சற்றே  வந்து காதில் பட வேணும்” என்கிற வரி டேப் ரிக்கார்டரில் ஓடி முடிந்தது. தலை சீவிக் கொண்டிருந்த அப்பா அலங்காரத்தை நிறுத்தி விட்டு ” சற்றே” -  ன்னு எழுதுனாம் பாரு.... அதனாலதான் அவன மகாகவிங்கறாங்க..” என்றார்.  பிறகு மந்திரத்தை முனகுவது போல அந்த ‘ சற்றே’ யை முனகிக் கொண்டே இருந்தார். நான் முதன்முதலில் சொல் முன் திகைத்த தருணம் அதுதான் என்று நினைக்கிறேன். கவிஞனால் காணி நிலத்தை உருவாக்கி அதில் குயிலைக் கூவச் செய்வதோடு மட்டுமல்லாமல் அந்தச் குயிலிற்கும், காதிற்குமான தூரத்தையும் எழுத முடியும் என்கிற வியப்பு  அப்போது பள்ளிச் சிறுவனான என்னை இறுகப் பற்றிக் கொண்டது என்று நினைக்கிறேன். அப்பா ‘கவிஞர் ‘ என்கிற முன்னொட்டுக்கு ஏங்குபவர் என்பதால் கவிதை என்கிற சொல் வீட்டில் புழங்கி வந்த ஒன்றுதான்.  ‘கவிஞரே! “  என்று அழைத்தால் அவர் ஒரு சிரி சிரிப்பார். அது , அப்படி அழைத்தால் மட்டுமே வ

இதை நான் நம்புகிறேன்

  அ ம்மா.... அம்மா... அம்மா... என்று  ஒரு உயிர்  உள்ளுக்குள் அழுதபடி அமர்ந்திருக்கையில் அகத்திக்கீரை இலை ஒன்று முகம் திருப்பிப் பார்க்கும் இதை நான் நம்புகிறேன் அதனால் ஒன்றுமே செய்ய முடியாத போதும்

இசை கவிதைகள்

  1 மே லோட்டமான உண்மையிலிருந்து இறுதியற்ற உண்மைக்கு ஒரு உடையிலிருந்து இன்னொரு உடைக்கு மாறுவது போல் அல்ல ட்ரவுசருக்கு மாறுவது ட்ரவுசருக்கு மாறுகையில் நான் தயாராகிறேன் எதற்கென்றால் எல்லாவற்றிற்கும் உறக்கத்திற்கு போர்க்களத்திற்கு எல்லாவற்றிற்கும் ட்ரவுசர் அணிந்தவுடன் சிறுவனாகி விடுகிறோம் என்று சொல்பவர்கள் மேலோட்டமான நம்பிக்கைகளில் வாழ்ந்து வருபவர்கள் அவர்களுக்கு லேசான உண்மைகள் போதுமானவை சுற்றுலா செல்கையில் ட்ரவுசர் அணிகிறவர்கள் உண்டு ட்ரவுசர் ஒரு சுற்றுலா என்பாரும் உண்டு ட்ரவுசரில் இருக்கையில் நான் என் காதலி அதை அளக்க முடியாது என்பது போலவே சுருக்கவும் முடியாது ட்ரவுசரை காற்றோட்டம் என்பது மூடர் தம் சுருக்கம் 2 அ ங்கு வாத்தியக்காரன் வாத்தியத்திலிருந்து கையைத் தூக்கிவிடும் போது உருவாகும் தாளமே! நீ அங்கென்னைக் கூட்டிச்செல்! 3 த மிழ் மலர்கள் அது ஒரு சின்னத் தோட்டம் அதை நேற்றுதான் உருவாக்கியிருந்தார்கள். இன்று புதிதாக அதற்கொரு பெயர் சூட்டியிருக்கிறார்கள் “அருமலர் எழிலகம்” அதில் இனிமேல்தான் பூக்கள் வர இருக்கின்றன. அதற்குள் பூத்துக் குலுங்கிவிட்டன. 4 தே ங்கெண்ணெய் “அம்மா…” என்று கூவியபடி முதல் மு

முத்தம் என்பது வளர்ந்து கொண்டிருப்பது

ஒ ரு முத்தம்  பிறக்கிறது வளர்கிறது வளர்ந்து கொண்டே இருப்பது எதுவோ அதுவே முத்தம் ஒரு முத்தம்  நினைத்துக் கொள்ளும் போது இரட்டிப்பாகிறது முத்தமிட்டுக் கொண்டவர்கள் துடைத்தெறியப் படுகிறார்கள் முத்தம் இன்னும் அங்கேயே அப்படியே மின்னிக் கொண்டிருக்கிறது. பிறந்ததனைத்தும் அழிகின்றன முத்தங்களைத் தவிர தித்திக்காத ஒன்று  முத்தமாவதில்லை ஒரு போதும்  நாம் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறோம் ஊழி  தூங்கிக் கொண்டிருக்கிறது ஆணைப்  பெண்ணும் பெண்ணை ஆணும் மாறி மாறி கடித்துக் கொள்ளும் சம்பவத்திற்கு வேறு பெயர் சூட்டலாமே?