Skip to main content

Posts

Showing posts from October, 2024

இசை கவிதைகள் - அகழ்

கார் எனில் மயில் “மயில் தோக விரிச்சு நிக்குது” என்றாள். “மயிலா…. எங்கே… ?” என்றேன் திகைத்தபடி. “எங்கும் “ என்றாள் சிரித்தபடி. OOO இதில் மறைஞானம் ஒன்றுமில்லை தம்பி! நான் பிறக்கும் போதே பாதி மின்னலோடு பிறந்தேன் மின்னும் எதனுடனும் சட்டெனப் பின்னிக் கொள்கிறது என் மின்னல் நீ பிறக்கும் போதே பாதி மலரொடு பிறந்தாய் மலரைக் காண்கையில் அவிழ்வது அதுதான் அவள் கொஞ்சம் அந்திப் பொன் அந்தி அந்தியில் கரைந்து கொண்டிருக்கிறது அவனே எண்ணிக் கொண்டிருக்கும்படி அப்படியில்லை அவன் கண்ணீர்தான் கண்ணீரை அணைத்துக் கொள்கிறது இரண்டு பாதிகள் வட்டம் காணும் திருநாளில் வந்து நிற்கிறது பெளர்ணமி OOO களம் பல கண்டவரின் கடைசிச் சொற்கள் அவர் வீட்டிலிருந்து கிளம்புகையில் இனி யோசிக்க ஒன்றுமில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தார் ஆனால் வழியெங்கும் யோசித்துக் கொண்டே வந்தார் அந்தப் பாலத்தின் மீது நின்று கொண்டு மேலும் ஒரு மணி நேரம் தீவிரமாக யோசித்தார். இனி யோசிக்க ஒன்றுமில்லை என்பது உறுதியானவுடன் “கடைசியில் எல்லாம் சாதாரணக் காதல்கதைகள் தானா?” என்று குனிந்தவாக்கில் ஏரித் தண்ணீரை நோக்கிக் கேட்டார். பிறகு அவ்வளவு உயரத்திலிருந்து அதற்குள் ப...

இசை கவிதைகள் - வாசகசாலை

வி ச்ராந்தியின் முன் நிற்றல் பெசண்ட் நகரில் கடலுக்குச் செல்லும் வழியில் உள்ளது விச்ராந்தி நண்பர்கள் நாங்கள் ஒரு நாள் தவறினாலும் மறுநாள் கூடிவிடுவோம் அங்கு விச்ராந்தியின் முன் நிற்பதற்கு தூர தூரங்களிலிருந்தும் ஆட்கள் வருகிறார்கள் அங்கு பென்னம் பெரிய ஒரு மரமுண்டு அதுதான் அனைவரையும் அழைத்து வருகிறது என்று சொல்லப்படுவதுண்டு ஆனால் அது உண்மையின் ஒரு துண்டுதான் மனிதருள் மரமுண்டு நிழலுண்டு விச்ராந்தியின் முற்றத்திற்கு மரங்கள் வருகின்றன , போகின்றன விச்ராந்தியின் முன் நிற்கும் ஒருவன் சிகரெட்டை கொளுத்தினால் அவன் வாயிலிருந்து ஏகாந்தம் மிதந்து செல்வதைக் காணலாம் மனிதர்கள் சமயங்களில் துணிந்து முடிவெடுத்து விடுகிறார்கள் சிரிப்பைச் சவுக்கால் அடித்து  விட முடியாது விச்ராந்திக்கு கண்ணோ, மூக்கோ கிடையாது அது ஒரு முழு காது விச்ராந்தியின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டால் படத்தில் நாம் ஒரு டீ கடையின் முன் நிற்பது போலவே தோன்றும்.     • ஆ த்மாநாமின் புதிய கவிதை ஒரு ரோஜா நாற்று வாங்கி வந்தேன் வீட்டில் அதற்கு எந்த இடம் பிடித்திருந்ததோ அந்த இடத்தில் நட்டு வைத்தேன். ஒளி தந்தேன் நீர் தந்தேன் இ...