கார் எனில் மயில் “மயில் தோக விரிச்சு நிக்குது” என்றாள். “மயிலா…. எங்கே… ?” என்றேன் திகைத்தபடி. “எங்கும் “ என்றாள் சிரித்தபடி. OOO இதில் மறைஞானம் ஒன்றுமில்லை தம்பி! நான் பிறக்கும் போதே பாதி மின்னலோடு பிறந்தேன் மின்னும் எதனுடனும் சட்டெனப் பின்னிக் கொள்கிறது என் மின்னல் நீ பிறக்கும் போதே பாதி மலரொடு பிறந்தாய் மலரைக் காண்கையில் அவிழ்வது அதுதான் அவள் கொஞ்சம் அந்திப் பொன் அந்தி அந்தியில் கரைந்து கொண்டிருக்கிறது அவனே எண்ணிக் கொண்டிருக்கும்படி அப்படியில்லை அவன் கண்ணீர்தான் கண்ணீரை அணைத்துக் கொள்கிறது இரண்டு பாதிகள் வட்டம் காணும் திருநாளில் வந்து நிற்கிறது பெளர்ணமி OOO களம் பல கண்டவரின் கடைசிச் சொற்கள் அவர் வீட்டிலிருந்து கிளம்புகையில் இனி யோசிக்க ஒன்றுமில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தார் ஆனால் வழியெங்கும் யோசித்துக் கொண்டே வந்தார் அந்தப் பாலத்தின் மீது நின்று கொண்டு மேலும் ஒரு மணி நேரம் தீவிரமாக யோசித்தார். இனி யோசிக்க ஒன்றுமில்லை என்பது உறுதியானவுடன் “கடைசியில் எல்லாம் சாதாரணக் காதல்கதைகள் தானா?” என்று குனிந்தவாக்கில் ஏரித் தண்ணீரை நோக்கிக் கேட்டார். பிறகு அவ்வளவு உயரத்திலிருந்து அதற்குள் ப...