ப ழக்கதோஷத்தில் நான் கிள்ளிப் பூசிய திருநீற்றின் மீது நீ தொட்டுத் தீட்டிய தீற்றலில் எழுந்ததொரு தெய்வம் அவ்வளவு கும்பலுள் அதை நான் மட்டுமே பார்த்தேன் நான் மட்டுமே பாடினேன் அதற்கு ஆயிரமாயிரம் கரங்கள் அத்தனையத்தனை விழிகள் ஆயினும் நான் “ போதும்” என்று சொல்லிவிட்டேன்