Skip to main content

எப்படியாயினும்



“சத்தியம் தோற்பதில்லை!"

இதைச் சொன்ன போது

என் நெஞ்சம் விம்மியது

கண்கள் கொஞ்சம் கலங்கின

முஷ்டி தானாகவே

விண்ணை முட்டியது.


"என்னையா அழைத்தாய்.."?

என்று கேட்டு

என்னை நோக்கி 

சத்தியங்கள்  எழுந்து வந்தன.


வெள்ளையில்

கருப்பில்

கருப்பு வெள்ளையில்

பழுப்பில்

ஆரஞ்சில்

ஊதாவில்

கலக்கவே முடியாத கலவைகளில்

வானவில்லின் நிறத்தில் கூட ஒன்று இருந்தது.


"என்னையா அழைத்தாய்...?

இந்த முறை கொஞ்சம் சத்தமாக கேட்டன


நான்

அதைவிடச் சத்தமாய் அண்ணாந்து கூவினேன்...


"எப்படியாயினும்

ஏதோ ஒரு 

சத்தியம் தோற்பதில்லை"


Comments

Thendral said…
உமக்கு தோல்வி உண்டா🤞

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சின்னஞ் சிறியனவே! பென்னம் பெரியனவே!

கபிலர் கவித்துவத் திரட்டின் அடுத்த கட்டுரை இன்றைய அகழ் இதழில் வெளியாகியுள்ளது  மூவாயிரம் ஆண்டுகள் கழித்து இந்தக் கதையின், இதே பாத்திரங்கள், அப்படியே பாத்திரம் மாறாது நமது சினிமாவில் தோன்றினர். “ என்கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு… பிடிச்சா கட்டிக்குங்க…” என்று ஒரு தமிழறிஞர் தமாசு செய்தார். கபிலர் என்கிற புலவர்க்குப் பதில் இப்போது பட்டிமன்ற நடுவர். பலரும் ஏற்க மறுக்கும் கட்டங்கரிய பெண்களாக பாரி மகளிர். இவ்வளவும் தற்செயலா? கச்சிதமா? ஒரு இயக்குநரின் தனி மூளையில் உதித்த காட்சியாக இது எனக்குத் தெரியவில்லை. நமது ‘ பெரியோர்கள் பலரும் சேர்ந்து நடத்திய நாடகம் ‘ என்றே எண்ணத் தோன்றுகிறது... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு  கீழே உள்ளது. https://akazhonline.com/?p=12062