Skip to main content

உப்புபுளிமிளகாயார்




உப்புபுளிமிளகாய் மறுக்கப்படுவதாக
தீர்ப்பு சொன்ன நாளில்
அவன் கவிச்செருக்கில் ஓங்கரித்தான்.
தான் உப்பென்றெழுத உப்பாகும் என்று கூவினான்.
ஆனால் அப்படியெதுவும் ஆகவில்லை.
நான் ஒரு மோசமான கவியா என்று
வானத்தை நோக்கிக் கத்தினான்.
உடைந்து உடைந்து அழுதான்.
உப்புபுளிமிளகாய், உப்புபுளிமிள்காய் என்று
உளறி உளறி பித்தானான்
காடுகரைகளில், தோட்டவயல்களில், வீட்டுச்சுவர்களில்,வனத்து மரங்களில்
கோவில்பிரகாரங்களில், நடைபாதைவழிகளில்,
ஆற்றில், குளத்தில்
ஊருணி நீரில்
எங்கும் எப்போதும்
ஒரு கிறுக்கு ஓவியனைப் போல
உப்புபுளிமிளகாய் என்று எழுதிக்கொண்டிருந்தான்.
கடைசியில் கலைவாணி கண் திறந்தாள்.
அவன் உப்பென்றெழுதியததெல்லாம் உப்பாகி
ஊர் உப்புபுளிமிளகாய்க்குள் மூழ்கியது.
...
அவன் பித்தாகி அலைந்த காலங்களில்
எழுதிய 400 பாடல்கள்
கி.பி.6 ம் நூற்றாண்டில் பூவூர்கிழார் என்பவரால்
"அறநானூறு" என்கிற பெயரில்
தொகுக்கப்பட்டது.
கவிஞரின் பெயர் பற்றிய குழப்பங்கள் நிலவியதால்
எழுதியவர் பெயர்
"உப்புபுளிமிளகாயார்" என்றே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
" இதன் தலைப்பை கருதி இதை பதினென்கீழ்கணக்கு நூல்களில்
ஒன்றாக வைத்து எண்ணுதல் தாகாது என்றும்,
இவை ஆழ்ந்தவாசிப்பை கோரும் நுட்பம்மிகுபாடல்கள் என்றும் குறிப்பிடுகிறார் நச்சினார்க்கினியர்.
இக்கவிதைகளின் லய ஒழுங்கும், ஓசைநயமும்
இதைப் படிப்போரின் இருதயதில் ஓயாது ஒலிக்க வைப்பன
என்று புகழ்கிறார் மணிநாப் புலவர்.
அறநானூற்றின் சில பாடல்களை
சித்து வேலை செய்வோர் ரகசியமாக பயன்படுத்தி வந்ததாக
ஒரு கருத்துண்டு.
...

சுப்பிரமணிய பாரதி
தன் கஷ்டகாலங்களில்
உப்புபுளிமிளகாயாரை வேண்டிப் பாடி
உப்புபுளிமிளகாய் பெற்றுக்கொண்டதாக
ஒரு தகவலுண்டு.
ஆனால் பாரதி ஆய்வறிஞ்ர் யாரும்
இதுவரை இத்தகவலை உறுதி செய்யவில்லை.
...
"உப்புபுளிமிளகாயூரை" சேர்ந்த 200 பெண்கள்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்
அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டனர்.
சாலைகளை மறித்துப் போராடினர்.
இதனால் நேற்று கோவை மாநகர் முழுக்க
போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்பட்டது.
...
அறநானூற்றின் பிரதிகள் எதுவும்
தற்போது காணக்கிடைப்பதிலை.
ஆனால் ஹெச்.சி.ரசூல் ஒரு முறை
அறநானூற்றின் பிரதியொன்று
தன்னிடம் இருப்பதாகவும்,
ஆனால் அதை தான் எங்கும் வாங்கவில்லை என்றும்
ஒரு நாள் புத்தக அலமாரியில் இருந்து
அது திடீரென வெளிப்பட்டதாகவும்
மிரட்சியுடன் குறிப்பிட்டார்.
லீனா மணிமேகலை
அறநானூற்றின் சில கவிதைகளை
அவ்வப்போது எனக்கு ஈ மெயிலில் அனுப்புவதுண்டு.

Comments

Anonymous said…
அப்றம்?
///சுப்பிரமணிய பாரதி
தன் கஷ்டகாலங்களில்
உப்புபுளிமிளகாயாரை வேண்டிப் பாடி
உப்புபுளிமிளகாய் பெற்றுக்கொண்டதாக
ஒரு தகவலுண்டு.
ஆனால் பாரதி ஆய்வறிஞ்ர் யாரும்
இதுவரை இத்தகவலை உறுதி செய்யவில்லை./////

எனக்கு தமிழ் கற்பித்த தமிழ் ஆசிரியர் ஒருமுறை இதைப் பற்றி எனக்கு சொல்லி இருக்கிறார் . ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே தகவலை வாசிக்கும் இந்த சந்தர்பத்தை ஏற்படுத்திய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி .
________________
அனானி,

என் தளத்திற்கு வரும் முதல் அனானியை வருக வருக என்று வறவேற்கிறேன். என்னா பாஸ்.. நான் எல்லாம் ஒரு ஆளுன்னு எனக்கெல்லாம பயப்படறது.... எல்லாரும் பாத்துக்குங்க நானும் ரவுடி தான்.. நந்தவனதாண்டி பாடல்களுக்கு "மயிர்" என்று பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள்..
" மயிர் கெட்ட வார்த்தை இல்லப்பா .. தூய தழிழ் வார்த்தை..".
நன்றி.. மீண்டும் வருக..
மறத்தல் இசையில் சுதந்திரம்/தந்திரம்.
Poem Hunter said…
why this article gives prose like mood?
உப்புபுளிமிளகாயார் பாரதிக்கு மட்டுந்தான் கொடுப்பாரா? தமி்ழ்நதிக்குக் கொடுக்கமாட்டாரா? இந்த 'கும்பிடுற'வேலையெல்லாம் வேண்டாம்னு பார்த்தா கவிதை விடமாட்டேங்குதே:)
பறத்தல் அதன் சுதந்திரம் கேள்விப்பட்டிருக்கிறேன். சரவணன், 'மறத்தல் இசையின் சுதந்திரம்-தந்திரம்'?

கவிஞர்கள் பேச்சு புரியமாட்டேனென்கிறது.

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை