Skip to main content

உப்புபுளிமிளகாயார்




உப்புபுளிமிளகாய் மறுக்கப்படுவதாக
தீர்ப்பு சொன்ன நாளில்
அவன் கவிச்செருக்கில் ஓங்கரித்தான்.
தான் உப்பென்றெழுத உப்பாகும் என்று கூவினான்.
ஆனால் அப்படியெதுவும் ஆகவில்லை.
நான் ஒரு மோசமான கவியா என்று
வானத்தை நோக்கிக் கத்தினான்.
உடைந்து உடைந்து அழுதான்.
உப்புபுளிமிளகாய், உப்புபுளிமிள்காய் என்று
உளறி உளறி பித்தானான்
காடுகரைகளில், தோட்டவயல்களில், வீட்டுச்சுவர்களில்,வனத்து மரங்களில்
கோவில்பிரகாரங்களில், நடைபாதைவழிகளில்,
ஆற்றில், குளத்தில்
ஊருணி நீரில்
எங்கும் எப்போதும்
ஒரு கிறுக்கு ஓவியனைப் போல
உப்புபுளிமிளகாய் என்று எழுதிக்கொண்டிருந்தான்.
கடைசியில் கலைவாணி கண் திறந்தாள்.
அவன் உப்பென்றெழுதியததெல்லாம் உப்பாகி
ஊர் உப்புபுளிமிளகாய்க்குள் மூழ்கியது.
...
அவன் பித்தாகி அலைந்த காலங்களில்
எழுதிய 400 பாடல்கள்
கி.பி.6 ம் நூற்றாண்டில் பூவூர்கிழார் என்பவரால்
"அறநானூறு" என்கிற பெயரில்
தொகுக்கப்பட்டது.
கவிஞரின் பெயர் பற்றிய குழப்பங்கள் நிலவியதால்
எழுதியவர் பெயர்
"உப்புபுளிமிளகாயார்" என்றே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
" இதன் தலைப்பை கருதி இதை பதினென்கீழ்கணக்கு நூல்களில்
ஒன்றாக வைத்து எண்ணுதல் தாகாது என்றும்,
இவை ஆழ்ந்தவாசிப்பை கோரும் நுட்பம்மிகுபாடல்கள் என்றும் குறிப்பிடுகிறார் நச்சினார்க்கினியர்.
இக்கவிதைகளின் லய ஒழுங்கும், ஓசைநயமும்
இதைப் படிப்போரின் இருதயதில் ஓயாது ஒலிக்க வைப்பன
என்று புகழ்கிறார் மணிநாப் புலவர்.
அறநானூற்றின் சில பாடல்களை
சித்து வேலை செய்வோர் ரகசியமாக பயன்படுத்தி வந்ததாக
ஒரு கருத்துண்டு.
...

சுப்பிரமணிய பாரதி
தன் கஷ்டகாலங்களில்
உப்புபுளிமிளகாயாரை வேண்டிப் பாடி
உப்புபுளிமிளகாய் பெற்றுக்கொண்டதாக
ஒரு தகவலுண்டு.
ஆனால் பாரதி ஆய்வறிஞ்ர் யாரும்
இதுவரை இத்தகவலை உறுதி செய்யவில்லை.
...
"உப்புபுளிமிளகாயூரை" சேர்ந்த 200 பெண்கள்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்
அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டனர்.
சாலைகளை மறித்துப் போராடினர்.
இதனால் நேற்று கோவை மாநகர் முழுக்க
போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்பட்டது.
...
அறநானூற்றின் பிரதிகள் எதுவும்
தற்போது காணக்கிடைப்பதிலை.
ஆனால் ஹெச்.சி.ரசூல் ஒரு முறை
அறநானூற்றின் பிரதியொன்று
தன்னிடம் இருப்பதாகவும்,
ஆனால் அதை தான் எங்கும் வாங்கவில்லை என்றும்
ஒரு நாள் புத்தக அலமாரியில் இருந்து
அது திடீரென வெளிப்பட்டதாகவும்
மிரட்சியுடன் குறிப்பிட்டார்.
லீனா மணிமேகலை
அறநானூற்றின் சில கவிதைகளை
அவ்வப்போது எனக்கு ஈ மெயிலில் அனுப்புவதுண்டு.

Comments

Anonymous said…
அப்றம்?
///சுப்பிரமணிய பாரதி
தன் கஷ்டகாலங்களில்
உப்புபுளிமிளகாயாரை வேண்டிப் பாடி
உப்புபுளிமிளகாய் பெற்றுக்கொண்டதாக
ஒரு தகவலுண்டு.
ஆனால் பாரதி ஆய்வறிஞ்ர் யாரும்
இதுவரை இத்தகவலை உறுதி செய்யவில்லை./////

எனக்கு தமிழ் கற்பித்த தமிழ் ஆசிரியர் ஒருமுறை இதைப் பற்றி எனக்கு சொல்லி இருக்கிறார் . ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே தகவலை வாசிக்கும் இந்த சந்தர்பத்தை ஏற்படுத்திய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி .
________________
அனானி,

என் தளத்திற்கு வரும் முதல் அனானியை வருக வருக என்று வறவேற்கிறேன். என்னா பாஸ்.. நான் எல்லாம் ஒரு ஆளுன்னு எனக்கெல்லாம பயப்படறது.... எல்லாரும் பாத்துக்குங்க நானும் ரவுடி தான்.. நந்தவனதாண்டி பாடல்களுக்கு "மயிர்" என்று பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள்..
" மயிர் கெட்ட வார்த்தை இல்லப்பா .. தூய தழிழ் வார்த்தை..".
நன்றி.. மீண்டும் வருக..
மறத்தல் இசையில் சுதந்திரம்/தந்திரம்.
Poem Hunter said…
why this article gives prose like mood?
உப்புபுளிமிளகாயார் பாரதிக்கு மட்டுந்தான் கொடுப்பாரா? தமி்ழ்நதிக்குக் கொடுக்கமாட்டாரா? இந்த 'கும்பிடுற'வேலையெல்லாம் வேண்டாம்னு பார்த்தா கவிதை விடமாட்டேங்குதே:)
பறத்தல் அதன் சுதந்திரம் கேள்விப்பட்டிருக்கிறேன். சரவணன், 'மறத்தல் இசையின் சுதந்திரம்-தந்திரம்'?

கவிஞர்கள் பேச்சு புரியமாட்டேனென்கிறது.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம