Skip to main content

ஸ்கூட்டிகள் மிதக்கும் கனா





1. அவன் கனவில் ஸ்கூட்டிகள் மிதக்கின்றன.
வெள்ளை, கருப்பு. அரக்கு, சில்வர் என
வகைவகையானவை.
எல்லாமும் முடுக்கப்பட்டு
குறுக்கும் நெடுக்குமாக ஓடத் துவங்குகின்றன.
ஒரு கம்பிக்கருவி எண்ணற்றவிரல்களால்
ஒரே சமயத்தில்
கண்டமேனிக்கு சுண்டப்படுகிறது.
விறைத்து அதிரும் அதன் உடல்
தாள மாட்டாது
ஒருக்களித்து சாய்கிறது.
ஸ்கூட்டிகள் மெல்ல மெல்ல வேகமாகி
காற்றில் ஒரு காற்றாகும் தருணத்தில்
துள்ளிக் குதிக்கிறது துளி வெண்மீன்.

2. இன்று செய்தித் தாள் பார்த்தீர்களா?
நின்று கொண்டிருக்கும் ஸ்கூட்டியின் மேல் படுத்துக்கொண்டு
அதை வெறி கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருக்கும்
மனநோயாளியின் புகைப்படமொன்று
அதில் வந்துள்ளது.

3. இந்த நகரத்தில் ஸ்கூட்டிகளுக்கு பாதுகாப்பில்லை.
நிறுத்திவிட்டு எங்கேயும் செல்லமுடிவதில்லை.
திரும்பி வந்து பார்த்தால்
சீட் கவரில் விந்துத் திட்டுக்கள்.

4. அவனிடம் திடமான கொள்கைகள் இருக்கின்றன.
மகத்தான லட்சியங்கள் இருக்கின்றன.
அதை வலியுறுத்த
அவனிடம்
எண்ணற்ற புத்தகங்களும் இருக்கின்றன.
ஒரு ஸ்கூட்டி வாசலில் நின்று கொண்டு
ஹாரணடிக்கிறது.
" எக்ஸ் க்யூஸ் மீ "
மகத்தான லட்சியங்களே!

5. அதிகாலை நீராடி
நெற்றியில் நீறு சாற்றி
" ஜலமலப்பேழை", " ஜலமலப்பேழை என்று
நூற்றியெட்டு முறை எழுதுகிறான் தினமும்.
எல்லாம் ஒரு ஸ்கூட்டியை பார்க்கும் வரை தான்.

Comments

Poem Hunter said…
scooty produced for that purpose. but you missed all the contigencies of Urumeengalatra nathi . . .

since?
//இந்த நகரத்தில் ஸ்கூட்டிகளுக்கு பாதுகாப்பில்லை.
நிறுத்திவிட்டு எங்கேயும் செல்லமுடிவதில்லை.
திரும்பி வந்து பார்த்தால்
சீட் கவரில் விந்துத் திட்டுக்கள்.//

கவிதை அருமை. வாழ்த்துக்கள்
nanba, thankal thiru mukathai kaanbithal mattumea thankaludan naan uraiyaada mudiyum
\\துள்ளிக் குதிக்கிறது துளி வெண்மீன்.\\

:)))))))))))))
class nanba

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

நடக்கக் கூடாதவை நடப்பதில்லை

பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின்  சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு  வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும்  உண்டு    சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

கண் கண்ட தெய்வம்

  “பங்கமர் குயில்”  என்று   சக்தியைப் புகழ்கிறான் ஒரு புலவன் வாசிக்க வாசிக்கவே வாசலில் கேட்டது  ஒரு கூவல் உச்சிக் கிளையில் அமர்ந்துளதா? இலைப்புதரில் மறைந்துளதா? மண்ணில் அமுது செய் மாயம் அது எங்குளது? இனிது தவிர  இன்னொன்றறியாய் ! எங்குளாய் நீ? பங்கமர் குயிலே …! பங்கமர் குயிலே …! இம்மரத்திலிருந்து அம்மரத்திற்கு  மாறி அமர்கையில் கண்டேன் உமையை கண் கண்ட தெய்வத்தை.