சுவரைத் தாண்டாத தாழ்ந்த குரலில்
உருக்கொள்கிறது ஒரு சச்சரவு
அந்த வீட்டின் அம்மாவும் அப்பாவும் மாறி மாறி ஏசிக்கொள்கிறார்கள்
வஞ்சினம் சொல்கிறார்கள்
அப்பா காலைத் தூக்கிக்கொண்டு அம்மாவை உதைக்க போகிறார்
அம்மா ஒரு சொல்லை பழுக்ககாய்ச்சி அப்பாவின் நெஞ்சில் வைத்து தேய்கிறார்
அம்மா நெஞ்செங்கும் அழ, அப்பா கண்களுக்குள் அழுகிறார்
அப்பா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்விற்குள் அம்மா மூத்திரம் மொண்டு வைக்கிறாள்
அம்மா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்வை
அப்பா எண்ணெய்ச் சவுக்கால் ஓங்கி ஓங்கி அடிக்கிறார்
நமக்கு தெரியும்
இரண்டு வயதே நிரம்பிய ஒரு குழந்தைக்கு என்ன தெரியுமென்று
நான் பேசுவதெதுவும் அதற்கு புரியாது
அதனால் பேசவும் முடியாது
இரண்டு முகங்களையும் மாறி மாறி பார்க்கும் அது
ஐந்தாம் வீட்டின் சுவரை முட்டிக்கொண்டு அழுகிறது
பொன்னான வாழ்வில் பூத்த குட்டிச் செம்பொன்
அநியாயத்திற்கு வளர்ந்து விட்டது
உருக்கொள்கிறது ஒரு சச்சரவு
அந்த வீட்டின் அம்மாவும் அப்பாவும் மாறி மாறி ஏசிக்கொள்கிறார்கள்
வஞ்சினம் சொல்கிறார்கள்
அப்பா காலைத் தூக்கிக்கொண்டு அம்மாவை உதைக்க போகிறார்
அம்மா ஒரு சொல்லை பழுக்ககாய்ச்சி அப்பாவின் நெஞ்சில் வைத்து தேய்கிறார்
அம்மா நெஞ்செங்கும் அழ, அப்பா கண்களுக்குள் அழுகிறார்
அப்பா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்விற்குள் அம்மா மூத்திரம் மொண்டு வைக்கிறாள்
அம்மா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்வை
அப்பா எண்ணெய்ச் சவுக்கால் ஓங்கி ஓங்கி அடிக்கிறார்
நமக்கு தெரியும்
இரண்டு வயதே நிரம்பிய ஒரு குழந்தைக்கு என்ன தெரியுமென்று
நான் பேசுவதெதுவும் அதற்கு புரியாது
அதனால் பேசவும் முடியாது
இரண்டு முகங்களையும் மாறி மாறி பார்க்கும் அது
ஐந்தாம் வீட்டின் சுவரை முட்டிக்கொண்டு அழுகிறது
பொன்னான வாழ்வில் பூத்த குட்டிச் செம்பொன்
அநியாயத்திற்கு வளர்ந்து விட்டது
Comments
விஷ்ணுபுரம் சரவணன்
//ஆனாலும் அதற்கு உலகம் முழுவதும் ரத்த உறவுகள்.//
உலகம் முழுவதும் செம்பொன்.