திடும்.. திடும்..
திடும்.. திடும்..
த்துடுடும்.. த்துடுடும்..
த்துடுடும்.. த்துடுடும்..
த்துடுடுடுடும்..
டுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்..
த்துடுடும்.. த்துடுடும்..
த்துடுடும்.. த்துடுடும்..
த்துடுடுடுடும்..
டுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்..
திடுமு உறுமியதில்
மனத்துக்கண் விழித்துக் கொண்டது.
தப்பட்டையும் பலகையும்
சேர்ந்து
அணைந்து கிடந்த
உயிரில் வாய்வைத்து ஊதின.
ஒரு நிமிடம் போதும்
….
காலில் சலங்கையை
ஏற்றிவிட்டு
தலையில் ஒரு ஈரிலைத்துண்டை
சுற்றிக்கட்ட ..
ஆனாலும் அது இயலாது
ஏனெனில் நான் ஒரு
கனவான்
ட்டுடுடுட்டும்…
ட்டுடுடுட்டும்…
ட்டுடுடுட்டும்…
ட்டுடுடுட்டும்…
டுட்டூ.. ட்டு…
டூ… டுடும்
ட்டுடுடுட்டும்…
ட்டுடுடுட்டும்…
ட்டுடுடுட்டும்…
ட்டுடுடுட்டும்…
டுட்டூ.. ட்டு…
டூ… டுடும்..
கனவானுக்கு மறுக்கப்பட்ட
களியாட்டத்தின் முன்
கால்களை இறுக்கிக்கொண்டு
நவண்டைக் கடித்த
படி நிற்கிறேன்
உதறி உதறி உள்ளேயே
விழுகிறேன்
அப்போது பறந்த விசிலிற்கு
அந்த உதட்டை முத்தி
எடுக்கவேண்டும்.
கோடி சொற்களைக்
கொட்டும் இரட்டைக் குச்சியை
லுங்கிக்கட்டில்
செருகிக் கொண்டு போகும்
திடுமுக்காரரே …
உன் அப்பனுக்கு
சிரட்டையில் தண்ணி
ஊற்றிய பாவந்தான்
நான் இப்படி
ஒற்றைச் சொல்லிற்கு
நாயாய் சாகிறேன்.
Comments