ஒரு மேட்டு வீட்டைக் காட்டி
”அந்த வீட்டு ஆள் ஒரு கொலைகாரன் “ என்றார்கள்.
கூரைமட்டும் கொஞ்சமாய் வெளித்தெரிய
மற்றதனைத்தும்
பச்சையால் மறைக்கப்பட்டிருந்தது
கூரைமீதும் பச்சை ஏறியிருந்தது
” அதுவும் இரட்டைக் கொலை “ என்றார்கள்
அதிலும் ஒரு பெண்...
அதுவும் வண்புணர்ந்து ...
அந்த வீடா... ?
அந்த வீடா ... ?
என்று திரும்ப திரும்பக் கேட்டேன்
பச்சையே ... பச்சையே...
உன்னால் நெஞ்சில் ஏற ஏலாதோ ?
நன்றி ; உயிர்மை செப்-2016
Comments