சிவராசண்ணனை லாரி தூக்கி வீசி விட்டது.
" ப்ரே பண்ணிக்குங்க அங்கிள்..."
போனில் அழுகிறாள் அவர் மகள்.
அப்போதுதான் உறைத்தது
எனக்கு
மண்டியிட ஒரு தெய்வமில்லை என்பது.
ஆனாலும்
மண்டியிட்டே ஆக வேண்டும்
அறுவை சிகிச்சை நிபுணர்களும்
அதையே சொல்கிறார்கள்.
சிவராசண்ணன்
நாளிரண்டு முறைகள்
ஓய்வாக நின்று, ஆனந்தமாக புகைபிடிப்பாரே
அந்த மே ஃப்ளவர் மரத்தடிக்கு ஓடினேன்.
அதன் முன் மண்டியிட்டேன்.
Comments