யானை தன் காட்டில் அசைந்து அசைந்து செல்வதைப் போலே இந்தப் பிரதான சாலையைக் கடந்து கொண்டிருக்கிறது ஒரு தூவெண் பூனை பூனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்வது தன்னிலிருந்து தனக்கு சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் ஒருவன் நிலை தடுமாறி ப்ரேக் அடித்து காலூன்றி நிற்கிறான் பொதுவாக அது ஒதுங்கி ஒளிவது ஓடி மறைவது இன்றென்னவோ ரொம்பத்தான் பிலுக்கு " உங்கப்பன் போட்ட ரோடா?" என்றவன் கேட்கவில்லை. ஆனால் அதன் நடை அப்படித்தான் சொல்லியது. |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments