சைக்கிள் சறுக்கி தரையில் விழுந்துவிட்டாள் சின்னஞ்சிறுமி. முதல் காயம் முதல் குருதி வீறிட்டு வீறிட்டுக் கதறுகிறாள் மருத்துவத்திற்கு ஒத்துழைக்க வைக்க மூன்றுபேர் சேர்ந்து போராட வேண்டியிருந்தது. காயத்தைத் துடைத்து மருந்திட்டுக் கட்டினேன் அழுகை தேய்ந்து முனகலான போது கட்டுத் துணியைப் பார்த்து ஏனோ "கொக்கு போல் இருக்கு" என்றாள் அப்போதே அந்தக் காயம் எழுந்து பறந்து போவதைக் கண்டேன். |
உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும் அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில் மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு வேறொரு காதல் இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

Comments