அந்திக்கடல் மணலில் கிடாரை மீட்டியபடி ஒருவன் பாடிக் கொண்டிருக்கிறான் அருகே மல்லாந்து வான்நோக்கிக் கிடக்கிறான் ஒருவன் அந்திக்கடல் மணலில் ஒருவன் பாடிக் கொண்டிருக்கிறான் ஒருவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். தூரத்திலிருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பாடும் பாடலை ஏற்கனவே தெரியுமெனக்கு கேட்கும் பாட்டையும் பார்க்கும் பாட்டையும் இன்றுதான் சந்திக்கிறேன் முதனமுதலில் அந்திக் கடல்மணலில் மூவர் பாடிக் கொண்டிருக்கிறார்கள். |
Comments