நீ மட்டும் நடனிப்பதை நிறுத்திவிட்டால் யாவும் நின்றுவிடும். ஆந்தைக்குத் துணையாக மொட்டை மாடியில் திரிய மாட்டேன். துருவேறிய பழந்தகரக் குரலால் பாட்டெடுக்கத் துணிய மாட்டேன் ஓய்வில் இருக்கும் சொற்களை கசையடியால் துன்புறுத்தி கவிதையில் கட்டி இழுக்க மாட்டேன். மகளின் பிறந்த நாளை மறந்துவிட்டு அவளை கண்ணீர் வடிக்க விட மாட்டேன் நீதிநூல் குவியல் மீது செருப்புக் காலால் நடக்க மாட்டேன் நாவே அஞ்சி நடுநடுங்கும் பொய்களை ஒரு போதும் சொல்ல மாட்டேன் அடீ ! பேச்சைப் பாடாதே! பேச்சில் ஆடாதே! நடனம் ஒரு பொல்லாத தீங்கு ஆயினும் நீ அதனை நிறுத்தாதே! |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments