எது என் இரத்தத்தில் சாக்கடையைக் கலக்குமோ எது என் கண்ணீர் கொப்புளங்களை வெளிச்சத்தில் வைக்குமோ எது என்னை அழுக்காறின் பள்ளத்தாக்குள் தலைகுப்புறத் தள்ளுமோ எது என் என்பது கிலோவை எறும்பாக்கிப் போடுமோ எதன் முன்னே எவ்வளவு சிரித்தாலும் எனக்குச் சிரிப்பு வாராதோ எதைக் கண்டால் என் கண்களில் விடம் கொதித்து நொதிக்குமோ எதைக் காணுகையில் என் உறையிட்ட குறுவாள் புரண்டு புரண்டு துடிக்குமோ இதோ அது எதிரில் வருகிறது... கடவுள் பாவமென்று தலையைக் குனிந்து கொள்கிறேன். |
Comments