Skip to main content

QUOTE - களின் காலம்


           




1.
      “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."
 என்கிற கோட்டின் வழியே
 கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.
 

 2.

       தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும்.


3.
    கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்
  எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது
  ஒரு கோட் !

4.
    வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்
    ஒரு கோட்டாக.



5
        கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக 
       நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்
       பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்
      

6
      வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்
    என்கிற கோட்டிலிருந்து
    பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்
    அத்தனை பேக்கரிகளும்.

7.
     
     எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;
     ஆனால் கோட்களின்றி ஓடாது
      என்பான் புத்திசாலி.
  
  8.
 
     இல்லத்து அரசியரே!
     உங்கள் மனாளனின் அடிவயிற்றில்
     ஓங்கி ஒரு உதை விட
    பொன்னான வாய்ப்பு....
     பதிவிறக்கம் செய்வீர்
    " share chat "


9.
    நட்பிலிருந்து காதலுக்கு அழைக்க
    100 கோட்கள் தேவைப்படுகின்றன.
    காதலிலிருந்து கட்டிலுக்கு  நகர்த்தவோ
   ஆயிரம் வரை  செலவழிக்க வேண்டியிருக்கிறது
  என்று அலுத்துக் கொள்கிறான் 
  ஒரு தத்துவாசிரியன்.


 10.
        
  உன்  800 பக்க நாவலில் 
  அந்த இரண்டு வரிக் கோட்டை நீக்கி விடச்             சொன்னால்
 ஏன் பதறியடித்து ஓடுகிறாய் தஸ்தேவ்யஸ்கி ?



11.
     கோட்களை கேலி செய்து நீ எழுதிய கோட்தான்
     இன்று
    கோட்களுக்கெல்லாம் மேலான  கோட்டாக
    கோலோச்சிக்  கொண்டிருப்பதை
    அறிவாயா நாகராஜா?

12.
    பிடித்துத் தொங்க  கோட்களேதும் மிச்சமில்லை
   என்றான பிறகுதான்
   ஒருவன் தூக்குக் கயிற்றில் தொங்கி         விடுவதென்ற   தீர்மானத்திற்கு வருகிறான்.

13.
   எனதருமை கோட்களே !
   நீங்கள் கடவுளரைப் போலன்றி  ஓரவஞ்சனை செய்யாதிருங்கள் !


            நன்றி : காலச்சுவடு- செம்டம்பர்-18
  
 

Comments

nikkisa889 said…
Can I just say what a aid to seek out someone who really is aware of what theyre talking about on the internet. You definitely know find out how to bring a difficulty to light and make it important. More folks need to learn this and understand this facet of the story. I cant imagine youre not more common because you positively have the gift. gsn casino slots
நாளை மற்றுமொரு நாளே
Thendral said…
Very strong pen skill with positive thoughts. Simple man with powerful words. Blessed with elegant writing skills that replicate your inner soul.

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...