புதிய பணியிடத்தில் பெயரறியாத மலர் ஒன்றைக் கண்டேன். அதை " அலரி"என்று சொன்னார்கள். கண்களைப் பிடுங்காத வண்ணம் யாரையும் அழைக்காத ஒரு அழகு ஏழு ஊரில் எந்த ஊரிலும் மணக்காதது ஆயினும் சுகந்தி எதையுமே நிறைக்காமல் இருந்து கொண்டே இருக்கும் மிதம் அடிக்கடி தலையை பாறாங்கல்லில் முட்டிக் கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையான நான் இப்பொழுது அந்த மலரை தொட்டுக் கொண்டு நிற்கிறேன் அவ்வளவு வாஞ்சையூற நொதி நொதிக்கும் பொறாமையோடு. |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments