Skip to main content

மழை என்பது பஜ்ஜி விருந்து

 



"உயிரின் சுபாவம் ஆனந்தம்" 

என்கிறான் தேவதேவன்.

பார்க்கப் பளபளக்கும் ஒரு வரி இது


தென்படும் ஒவ்வொரு மனிதனிடமும் வினவுகிறேன்..

"ஆனந்தத்தைப் பார்த்தாயா?"

அதன் அங்க அடையாளங்களை

வினவுகிறான் அவன்


நானும் பார்த்ததில்லை

பார்த்தவர்களைப் பார்த்துவிட்டால் கூட போதும்


கண்ணைக் கொஞ்சம்  மூடினால்

கண்டுவிடலாம்

காதைக் கொஞ்சம்  மூடினால்

கேட்டு விடலாம்

பாவம், நம்மால் அது முடியாது.


ஆனந்தம்

மனிதனின் ஆறடிக்கு மேல்

அறுபதடி உயரத்தில் இருக்கிறது


உயிரின் சுபாவம் கிளுகிளுப்பு

ஆனால்,

அதைச் சொல்ல மாட்டான் தேவதேவன்.


               நன்றி; காலம்- 60


Comments

radkrish said…
This comment has been removed by the author.
radkrish said…
உங்களது இந்த கவிதையை பிடிக்கும் பொது நான் பார்த்த இந்த வீடியோ நியாபகம் வந்தது, பாருங்க.. உங்களுக்கு புரிந்தது தான். கொஞ்சமா வேது சிரிப்பு நிச்சயம்.

https://www.youtube.com/watch?v=_bSlFiEwj-g
Thendral said…
Feeling sad makes us to understand the real worth of happiness. Heavy words with pleasand style

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நக...

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் ...