வரவர எனக்குத் திகில் படங்கள் மிகவும் பிடிக்கின்றன. ரிமோட்டை அழுத்தி அழுத்தி ஒன்று விடாமல் தேடுகிறேன் பேய்கள் என்னைக் கேட்டுக் கொண்டுதான் திரையரங்கம் வருகின்றன. காய்ந்த சருகுகள் எவ்வளவு பிரமாதமாக நடிக்கின்றன யாருமற்ற திசை நோக்கி விட்டு விட்டுக் குலைக்கும் கருப்பு நாய் கும்மிருட்டை கிழித்துக் கொண்டு அடிக்கும் சின்ன வெளிச்சம் சூப்பர்….. திகிலின் கதவைத் திறந்து கொண்டு திகிலுக்குள் வருகிறேன் காய்ந்த சருகோ கருப்பு நாயோ இல்லாத திகில் அஞ்சி அஞ்சி குலை நடுங்கும் திகில் நடுநடுங்கித் தலைகுனியும் திகில் |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments