Skip to main content

கிறுக்கு


  




மார்கழிப்பனியில்
காதடைத்த பஞ்சோடு
அதிகாலை ஐந்துமணிக்கெல்லாம்
மைதானங்களில் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு
ஃபிட்னஸ் கிறுக்கு பிடித்திருக்கிறது

அதே சிற்றஞ் சிறுகாலையில்
மதுவிடுதியின் கதவுகளை ஓங்கி ஓங்கி தட்டுகிறான் ஒருவன்
அவனைத் தான் நாம் குடிக்கிறுக்கென்கிறோம்

உருளைக்கிழங்கு போண்டாவை மணமுடித்து
அதனூடே 72 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்ததொரு கிறுக்கு

 சிங்கத்தின் வாயில் தலையைத் தந்துவிட்டு
 கர்த்தரை நோக்கி கூவுகிறதொரு கிறுக்கு

 பெண்கிறுக்கில் பலநூறு உட்கிறுக்குகள்
சாரதி வைத்து தேரோட்டிய அதே தெருவில்
இன்று நெஞ்சைப்பிடித்த படி பஸ்ஸிற்கு ஓடுகிறார்
கல்யாணசுந்தரம்
அவருக்கு கார்குழல் துவங்கி கால்நகம் முடியவும் கிறுக்கான கிறுக்கு

இசைக்கிறுக்கில்
வகைக்கொரு கிறுக்கு..
வாத்தியத்திற்கொரு கிறுக்கு..

கிறுக்குகள் தம் கிறுக்குத்தனத்தின் அச்சில்
ஜம்மென்று அமர்ந்திருக்க
அதிலொரு கிறுக்கு
நேற்று உத்தரத்தில் தொற்றி விண்ணுலகு போனதேன்?
போகும் முன் தன் ப்யானோவை நூறு சுக்காக்கியதேன்?

Comments

சுவையான கவிதை. ‘ஞானக் கிறுக்கு’ என்ற வார்த்தை நினைவுக்கு வருகிறது. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான