Skip to main content

சாய்ஸ்

                                   
               




 பிள்ளைவரம்  வேண்டி
  அரசமரம்  ஆலமரம்
  அந்தமரம்  இந்தமரம்
  கண்டமரம்  சுற்றிக்களைத்த  கடைசியில்
  இரங்கி வந்தது இறை
 “ தற்போதைய கையிருப்பு இரண்டு ஆண்மகவுகள்…            
  ஒரு  குழந்தை சச்சின் டெண்டுல்கர் என்று
  நாமகரணம் சூட்டப்படும்.
  16 வயதில்  மட்டையைத் தூக்கிக்கொண்டு உலகத்தின் முன் வருவான்
  தன் கதாவீச்சால்  சாதனைகளின்  நெஞ்சைப்பிளப்பான்
  ரூபாய், டாலர் , யென் என எல்லாவற்றிலும் சம்பாதிப்பான்.
  இவன்  துய்த்தெறிந்த   பொருட்கள்  லட்சங்களில்  ஏலம் பெறும்.
  இவனுக்கு  ஏக்கமே இராது
 அதன்  விளைவாக  கனவும் வாராது.
  புகழ்  வீங்கி  முற்றியதோர்  கட்டத்தில்
 “ கடவுள் என்றே அழைக்கப்படுவான்
   நீ கடவுளின்  தாயாக  இருப்பாய்
  இன்னொருவன் பெயர்  சத்தியமூர்த்தி
  லேசாக  நா  நடுங்கும்
 அவ்வப்போது  உடல் கிடந்து  உதறும்
 அவசரவசரமாக   மீசை அரும்பி
அக்காக்கள்  குளிக்கையில்  படலைப் பிரிப்பான்
பகல் முழக்க  தூக்கம்
இரா முழக்க ஆட்டம்
என்றலைந்து  திரிவான்.
அப்பாவை விழுங்கிவிட்டு
உன்னை வைத்து வைத்து  தின்பான்.
குலப்புகழின்  தொடைச்சொறி..
மலக்குழம்பில்  நெளிபுழு….
நின் கண்ணீரில் கரைந்தே கதை முழுக்க சொன்னோம்
இருவரில் ஒருவர்
யார் வேண்டும்  சொல் மகளே ! “
என் தாயவள்
மாசற்ற மாணிக்கம்
மாற்றுகுறையா தங்கம்
சத்திதான் வேண்டுமென்று
ஆடாது அசையாது
உறுதி காத்து நின்றதில்  பிறந்து வந்த குழந்தை  நான்
அன்னை ! அன்னைஅருட்பெருஞ்சோதி !
அன்னை ! அன்னைதனிப்பெருங்கருணை !

Comments

Saththi, saththi
Pinthik kidaiththa Peru varam.
Saththi, saththi
Munthich sellum vazhith thunai.
Saththi, saththi
Pinthik kidaiththa Peru varam.
Saththi, saththi
Munthich sellum vazhith thunai.
karur karthik said…
அப்பாவை தின்று வளர்ந்த திருமகனில் நானும் ஒருவன் சத்தி.

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.