Skip to main content

சாய்ஸ்

                                   
               




 பிள்ளைவரம்  வேண்டி
  அரசமரம்  ஆலமரம்
  அந்தமரம்  இந்தமரம்
  கண்டமரம்  சுற்றிக்களைத்த  கடைசியில்
  இரங்கி வந்தது இறை
 “ தற்போதைய கையிருப்பு இரண்டு ஆண்மகவுகள்…            
  ஒரு  குழந்தை சச்சின் டெண்டுல்கர் என்று
  நாமகரணம் சூட்டப்படும்.
  16 வயதில்  மட்டையைத் தூக்கிக்கொண்டு உலகத்தின் முன் வருவான்
  தன் கதாவீச்சால்  சாதனைகளின்  நெஞ்சைப்பிளப்பான்
  ரூபாய், டாலர் , யென் என எல்லாவற்றிலும் சம்பாதிப்பான்.
  இவன்  துய்த்தெறிந்த   பொருட்கள்  லட்சங்களில்  ஏலம் பெறும்.
  இவனுக்கு  ஏக்கமே இராது
 அதன்  விளைவாக  கனவும் வாராது.
  புகழ்  வீங்கி  முற்றியதோர்  கட்டத்தில்
 “ கடவுள் என்றே அழைக்கப்படுவான்
   நீ கடவுளின்  தாயாக  இருப்பாய்
  இன்னொருவன் பெயர்  சத்தியமூர்த்தி
  லேசாக  நா  நடுங்கும்
 அவ்வப்போது  உடல் கிடந்து  உதறும்
 அவசரவசரமாக   மீசை அரும்பி
அக்காக்கள்  குளிக்கையில்  படலைப் பிரிப்பான்
பகல் முழக்க  தூக்கம்
இரா முழக்க ஆட்டம்
என்றலைந்து  திரிவான்.
அப்பாவை விழுங்கிவிட்டு
உன்னை வைத்து வைத்து  தின்பான்.
குலப்புகழின்  தொடைச்சொறி..
மலக்குழம்பில்  நெளிபுழு….
நின் கண்ணீரில் கரைந்தே கதை முழுக்க சொன்னோம்
இருவரில் ஒருவர்
யார் வேண்டும்  சொல் மகளே ! “
என் தாயவள்
மாசற்ற மாணிக்கம்
மாற்றுகுறையா தங்கம்
சத்திதான் வேண்டுமென்று
ஆடாது அசையாது
உறுதி காத்து நின்றதில்  பிறந்து வந்த குழந்தை  நான்
அன்னை ! அன்னைஅருட்பெருஞ்சோதி !
அன்னை ! அன்னைதனிப்பெருங்கருணை !

Comments

Saththi, saththi
Pinthik kidaiththa Peru varam.
Saththi, saththi
Munthich sellum vazhith thunai.
Saththi, saththi
Pinthik kidaiththa Peru varam.
Saththi, saththi
Munthich sellum vazhith thunai.
karur karthik said…
அப்பாவை தின்று வளர்ந்த திருமகனில் நானும் ஒருவன் சத்தி.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான