கடைக்கண்ணால் நோக்கி
நகைக்கூட்டம் செய்யத் துவங்கிவிட்டோம்
நாசூக்கு கூடி வருகிறது இருவரிடமும்
அந்தப் பாம்புக்குட்டியை
நான் பார்த்துவிட்டேன்
அது தன் பிளவுண்ட செந்நாவை
வெளியே நீட்டி
“காதல்..” “ காதல்..” என்கிறது
இதை இப்படியே
விடுதல் ஆகாது
எனவே
நேராகச் சென்று
“ இந்த வீக்
எண்ட்ல ஜாலியா மகாபலிபுரம் போலாமா...”
என்று கேட்டு வைத்தேன்.
”செருப்பு
பிஞ்சுடும்..”
என்றாள்
ஒரே
ஒரு செருப்படியோடு போனது
இப்போது
அவரவர் அவரவர் செருப்பை அணிந்து கொண்டு
அவரவர் சோலிகளைப் பார்க்கிறோம்.
(
தலைப்பின்பம்
நாஞ்சில்நாடனுடையது )
Comments