வெகு தொலைவிலிருக்கும்
உன்னைக் காணும் மோகம் பற்றிக்கொண்டு விட்டது. நீ அங்கே இருப்பாயோ மாட்டாயோ தெரியவில்லை. கிளம்பிவிட்டேன். சில டீ க்கள் நிறைய வானம் எண்ணற்ற மரங்கள் பலப்பல வேகத்தடைகள் வந்து கொண்டிருக்கிறேன் வழியெங்கும் நீ இருந்தாய் பத்தாய் நூறாய் உன்னை நெருங்கும் தறுவாயில் ஆயிரமாயிரமாய் அனந்த கோடியாய் உன் இருப்பிடத்திற்குள் நுழைகிறேன் நல்லவேளை நீ அங்கு இருந்தாய். ஆயினும் ஒன்றாய் ஒரே ஒன்றாய்.. |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments