ததும்புவதைக் காணும் போது
மனிதனுக்கு என்னவோ ஆகிவிடுகிறது. கடற்கரைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மலரில் ததும்பும் ஒன்றை யுகயுகமாக கண்டு தீர்க்கிறான் கவி ஒரு வயலின் ததும்பும்போது சகலமும் ததும்பிவிடுகிறது. பெண்ணின் காலடியில் கொட்டிக்கிடக்கின்றன கணக்கற்ற மண்டையோடுகள். எல்லாம் அவளில் ததும்பும் அதுவைக் காண வந்தவை. |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments