Skip to main content

களிற்றுநிரைகளின் காலி



ம்பளி போய்விட்டது


ஆண்டாள் போய் விட்டாள்


ஆயர்பாடி போய் விட்டது


காய்ச்சலும் இருமலும் போய் விட்டன.


கூம்பு ஹாரன்கள் போய் விட்டன.


'நாய்க்கூட்டம்' போய் விட்டது.


குளிர் காய்ச்சிய தேநீர் போய்விட்டது


விக்ஸ்புட்டிக்குள் ஒளிந்திருக்கும்  காமம்

காணாமல் போய் விட்டது


உள்ளங்கைகள் ஒன்றோடொன்று உரசும் காட்சிகள் போய் விட்டன


உதட்டு வெடிப்புகள் போய் விட்டன.


ஓயாத பொங்கல் மணம் ஓய்ந்து போய் விட்டது.


மாட்டுத்தொழுவத்து லீலி மலர் போய் விட்டது.


முற்றத்துக் கோலங்கள் போய் விட்டன.

அதனோடே போய்விட்டன குதிகால் பிறைகளும்.


நீர்த்துளிகள் மொய்க்கும் 

விரிநறுங்குழலிர்

ஐயோ...!  போயே விட்டனர்.


இவை போல் இன்னும் பல பரிவாரங்கள் உனக்கு


இத்தனையும் கூட்டிக் கொண்டு

எங்குபோய் மறைந்தாய் மார்கழி?


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை