கம்பளி போய்விட்டது ஆண்டாள் போய் விட்டாள் ஆயர்பாடி போய் விட்டது காய்ச்சலும் இருமலும் போய் விட்டன. கூம்பு ஹாரன்கள் போய் விட்டன. 'நாய்க்கூட்டம்' போய் விட்டது. குளிர் காய்ச்சிய தேநீர் போய்விட்டது விக்ஸ்புட்டிக்குள் ஒளிந்திருக்கும் காமம் காணாமல் போய் விட்டது உள்ளங்கைகள் ஒன்றோடொன்று உரசும் காட்சிகள் போய் விட்டன உதட்டு வெடிப்புகள் போய் விட்டன. ஓயாத பொங்கல் மணம் ஓய்ந்து போய் விட்டது. மாட்டுத்தொழுவத்து லீலி மலர் போய் விட்டது. முற்றத்துக் கோலங்கள் போய் விட்டன. அதனோடே போய்விட்டன குதிகால் பிறைகளும். நீர்த்துளிகள் மொய்க்கும் விரிநறுங்குழலிர் ஐயோ...! போயே விட்டனர். இவை போல் இன்னும் பல பரிவாரங்கள் உனக்கு இத்தனையும் கூட்டிக் கொண்டு எங்குபோய் மறைந்தாய் மார்கழி? |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...
Comments