ஓர் ஆனந்தக் கூவல் என் பெயர் சொல்லி அழைத்தது. எங்கோ தொலை தூரத்தில் அடியாழத்தில் அலைந்து கொண்டிருந்த என் கார் நிலைக்குத் திரும்பி விழித்தது. பள்ளித் தோழனொருவன் நகரசுத்தி தொழிலாளியாகி மக்கும் குப்பைக் குவியல்களுக்கிடையே தலைநீட்டி கையசைக்கிறான். அவன் பதுங்கி ஒளியாத அந்த இடத்தில் மலர்ந்து சிரிக்கிறது விடிய விடிய ஏடுகளில் மூழ்கி நான் துப்பறிந்தும் காணாத ஒன்று. |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments