புலிக்கு பசியில் வயிறு எரிந்தது. ஒரு மானைக் கண்டு பாய்ந்தது. பசி புலியை ஓடு ஓடு என்று விரட்டியது அச்சம் மானை ஓடு ஓடு என்று விரட்டியது. காட்டின் குறுக்கே சாலையைக் கடக்க முயல்கையில் துள்ளித் தாவிய மான் அவ்வழியே போன இரு சக்கர வாகனத்தின் மீது விழுகிறது. உல்லாசப் பயணம் வந்த இரண்டு இளைஞர்கள் இப்போது இரத்த சகதியில் கிடக்கிறார்கள் "எனக்கு ஒன்றும் தெரியாது குழந்தைகளே! " என்று அழுகிறது மான். "எனக்கும் ஒன்றும் தெரியாது குழந்தைகளே! " என்று அழுகிறது புலி. |
Comments