1. முட்டாளே! காலத்தைக் காட்டச் சொன்னால் கடிகாரத்தையா காட்டுவாய்? பேரறிவாளன் தலை வாரிக் கொண்டிருக்கிறான் அவன் உச்சி வழுக்கையைக் காட்டு! 2. எவனோ ஒருவனுக்கு ஒழுங்காகக் கேட்கவில்லை. எவனோ ஒருவன் ஒழுங்காக எழுதவில்லை. எவன் ஒருவனும் எவனோ ஒருவனல்ல உன் வாகனத்தின் மீது நேருக்கு நேராய் மோதிய லாரியின் டிரைவர் முந்தைய நொடிவரை எவனோ ஒருவன். 3. பரோலில் ஒரு விதமாகவும் விடுதலையில் ஒரு விதமாகவும் கூவும் குயிலொன்றை நெஞ்சில் வளர்த்து வருகிறான் அறிவு 4. பதினோரு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த ஒருத்தியை போதும் வா! என்று அழைத்துச் செல்கிறது நெருப்புத் தெய்வம். 5. அறிவு! நாம் கோப்பையை ஏந்துவோம் கொஞ்சம் உடைந்த கோப்பைதான் ஆயினும் என்ன? மோதி மோதி அதை மேலும் உடைப்போம். 6. வருக அறிவு! சூடான முட்டைப் பரோட்டோ உங்களை வரவேற்கிறது! |
Comments