Skip to main content

மானுடமே!

 



ங்கோ கணக்கு பிசகிவிட்டது.


அதைச் சரிக்கட்ட 

எத்தனையெத்தனை தெய்வங்கள்


ஒரு ஆதிதெய்வம்

அதற்கு ஒரு துணை தெய்வம்

அதைச் சுற்றி 

சில தெய்வங்கள்

அதன் வழி நூறு தெய்வங்கள்


இந்தத் தெய்வங்களைப் பின்னி

கொட்டிக் கவிழ்க்கப்படும் 

கொத்துக் கொத்தான கதைகள்

அந்தக் கதைகள் சொல்லும்

ஆகச் சிக்கலான நீதிகள்


பெரிய தெய்வங்களோடு

பேச முடியாதவர்களுக்கென

எண்ணற்ற  குட்டித் தெய்வங்கள்


தெய்வமில்லை

ஆனால் தெய்வம் போல என்பதாக

சில பாதி தெய்வங்கள்


தெய்வங்களை விரட்டியடிக்கப்போவதாக

சூளுரைத்து வந்து நின்ற

அறிவியல்

தொங்கிய தலையுடன் பின்வாங்கிய போது

ஆங்கு முளைத்தெழுந்த

ஆயிரமாயிரம் தெய்வங்கள்


தெய்வமே இல்லை

என்று வாதாடும் மூர்க்கர்களுக்கென

செய்து வைத்த

சில வேறு தெய்வங்கள்


அபாரம்...!

அபாரம்....!


இப்போது  கணக்கு சரியாகி விட்டதா மானுடமே?


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...