Skip to main content

இழுபறி நீடிக்கிறது

  






ன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் மிச்சமிருக்கின்றன.


இன்னும் வெல்ல வேண்டிய கோட்டைகள் காத்திருக்கின்றன


அன்னையின் மீது செய்து கொடுத்த

சத்தியங்களில் இரண்டு

அநாதைப் பிள்ளைகள்

ஆகி விட்டன.


ஆயினும்

நேற்றிரவு 

உன் நினைவு உலுக்கியெடுக்க

இன்ஸ்டாகிராமை "install " செய்தேன்.


விடிந்ததும்

லட்சியங்களின் காட்டுக் கூச்சல் தாளாது 

ஆக்ரோஷமாக அதை " uninstall " செய்தேன்.


அவை 

உறங்கப் போய்விட்ட வேளை பார்த்து

மீண்டும் "install" செய்தேன்.


எதையுமே பிடிக்காத

உச்சி வெயிலின் உக்கிரத்தில்

"தொலைந்து போ..." என்று

"Uninstall" செய்தேன்.


தூரத்து வானில்

வண்ணங்கள் நீந்தும்

இந்த அந்திப் பொழுதில்

இதோ,

"install" ஆகிக் கொண்டிருக்கிறது.



Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை